பண்டிகைக் காலம்; பிடியைத் தளர்த்தாதீர் என்கிறது உலக சுகாதார அமைப்பு

பண்டிகைக் காலம்; பிடியைத் தளர்த்தாதீர் என்கிறது உலக சுகாதார அமைப்பு

1 mins read
f31af47d-4b0b-4d6c-8f71-8c31ddfbb858
கொரோனா கிருமித்தொற்று விவகாரத்தால் பாகிஸ்தானில் சிக்கிக் கொண்ட இந்தியர்கள் தற்போது நாடு திரும்புகின்றனர்.வாகா எல்லைப் பகுதியில் அவர்கள் தீவிரமாக பரிசோதிக்கப்பட்ட பிறகே நாட்டுக்குள் அனுமதிக்கப் படுகின்றனர்.படம்: ஏஎஃப்பி -

கொரோனா கிரு­மித்­தொற்­றுப் பாதிப்பு சற்றே குறைந்­துள்­ளதை அடுத்து கட்­டுப்­பாட்டு விதி­மு­றை­களை தளர்த்­தி­விட வேண்­டாம் என தென்­கி­ழக்கு ஆசிய நாடு­க­ளுக்கு உலக சுகா­தார அமைப்பு அறி­வு­றுத்தி உள்­ளது.

பண்­டி­கைக்­கா­ல­மும் குளிர்­கா­ல­மும் அடுத்­த­டுத்து வரும் நிலை­யில் பாதிப்பு அதி­க­ரிக்­கக் கூடும் என அந்த அமைப்­பின் வட்­டார இயக்­கு­ந­ரான டாக்­டர் பூனம் கெத்­ரா­பால் சிங் எச்­ச­ரித்­துள்­ளார்.

"அண்­மைய சில வாரங்­களில் பாதிக்­கப்­ப­டு­வோர் எண்­ணிக்கை சற்றே சரிந்­தி­ருப்­ப­தால் தொற்றுப்­ ப­ர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்­தும் நட­வ­டிக்­கை­களில் மெத்­த­னப் போக்கு கூடாது. இவ்­வட்­டா­ரத்­தில் தொடர்ந்து பலர் பாதிக்­கப்­பட்டு வரு­கின்­ற­னர்.

"எனவே கொரோனா தொற்­றுப் பர­வலை முடி­வுக்கு கொண்டு வரு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­கள் தொடர வேண்­டும். பிடி­யைத் தளர்த்­தி­னால் பாதிப்பு அதி­க­ரித்­து­வி­டும்," என்று பூனம் சிங் தெரி­வித்­துள்­ளார்.

தொடர்ந்து மூன்­றா­வது வார­மாக தென்­கி­ழக்கு ஆசிய நாடு­களில் கொவிட்-19 பாதிப்பு உள்­ள­வர்­க­ளின் எண்­ணிக்கை ஆறு முதல் எட்டு விழுக்­காடு வரை குறைந்­துள்­ளது. இந்­தி­யா­வி­லும் பங்­ளா­தே­ஷி­லும் பாதிப்பு குறைந்­தி­ருப்­பதே இதற்­குக் கார­ணம் எனக் கூறப்­ப­டு­கிறது.

இந்­திய நில­வரம்

இதற்­கி­டையே திங்­கட்­கிழமை ஒரே நாளில் இந்­தி­யா­வில் 46,791 பேருக்கு புதி­தாக கொரோனா கிருமி தொற்­றி­யது உறு­தி­யா­னது.

மொத்த நோயா­ளி­க­ளின் எண்­ணிக்கை 7.6 மில்­லி­யனை நெருங்கி உள்­ளது. 6.73 மில்­லி­யன் பேர் குண­ம­டைந்­துள்­ள­னர். 748,538 பேர் சிகிச்சை பெற்று வரு­கின்­ற­னர்.