55 செய்தியாளர்கள் மீது தாக்குதல்

55 செய்தியாளர்கள் மீது தாக்குதல்

1 mins read
5d669beb-6ffd-41ec-9c52-2e68e05bc6d2
-

புதுடெல்லி: கொவிட்-19 தொற்று குறித்த செய்திச் சேகரிப்புப் பணியில் ஈடுபட்ட செய்தியாளர்கள் 55 பேர் தாக்கப்பட்டு இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இதையடுத்து, துன்புறுத்தல் இன்றியும் பழிவாங்கப்படுவோமோ என்ற அச்சமின்றியும் செய்தியாளர்கள் பணியாற்றுவதை உறுதிசெய்யுமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு இரு அனைத்துலகப் பத்திரிகைச் சங்கங்கள் கடிதம் எழுதியுள்ளன.

செய்தியாளர்கள் மீது தொடுக்கப்பட்ட அனைத்து தேச துரோக வழக்குகளையும் உடனே கைவிடும்படி மாநில அரசுகளுக்கு உத்தரவிடுமாறும் ஆஸ்திரியா, பெல்ஜியம் நாடுகளைச் சேர்ந்த அச்சங்கங்கள் பிரதமரைக் கேட்டுக்கொண்டுள்ளன.