இதற்கிடையே, கிருமித்தொற்றால் 10,000 உயிர்களைப் பறிகொடுத்த முதல் இந்திய நகரம் என்ற வேண்டாப் பெருமையைப் பெற்றது இந்தியாவின் வர்த்தகத் தலைநகரான மும்பை.
அங்கு இதுவரை தொற்றால் 10,009 பேர் உயிரிழந்துவிட்டனர்.
இந்தியாவில் பதிவான கொரோனா மரணங்களில் இது 8.5% எனக் கூறப்பட்டது.
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் மேலும் 53,370 பேரை கொரோனா தொற்ற, மொத்த பாதிப்பு 7,814,682ஆக உயர்ந்தது.
மேலும் 650 பேர் உயிரிழக்க, பலி எண்ணிக்கை 11,956ஆனது.