'பொருளியல் மீட்சிக்குப் பல ஆண்டுகளாகலாம்'

'பொருளியல் மீட்சிக்குப் பல ஆண்டுகளாகலாம்'

2 mins read
344fdf09-457c-47ad-91f5-faa7ccdbba83
படம்: ஏஎஃப்பி -

கொவிட்-19 நோய்ப் பர­வல் இந்­தி­யப் பொரு­ளி­யல் மீது ஏற்­ப­டுத்­தி­ வரும் தாக்­கத்­தில் இருந்து மீண்டு, பழைய நிலையை எட்ட பல ஆண்­டு­கள் ஆக­லாம் என்று ரிசர்வ் வங்­கி­யின் துணை ஆளு­நர் மைக்­கல் பத்ரா எச்­ச­ரித்­து இருக்கிறார்.

"எங்­க­ளது கணிப்­பு­கள் சரி­யாக இருக்­கும் பட்­சத்­தில், இவ்­வாண்டு இறு­தி­வாக்­கில் மொத்த உள்­நாட்டு உற்­பத்தி (ஜிடிபி) கொரோனா தொற்­றுக்கு முன்­னி­ருந்த நிலை­யைக் காட்­டி­லும் தோரா­ய­மாக 6% வீழ்ச்சி காணும். இந்­நி­லை­யில் இருந்து மீள்­வ­தற்­குப் பல ஆண்­டு­கா­லம் ஆக­லாம்," என்று திரு பத்ரா தெரி­வித்­துள்­ளார்.

இதை­ய­டுத்து, கட்­ட­மைப்­புச் சீர்­தி­ருத்­தங்­களை மேற்­கொள்ள வேண்­டும் என வலி­யு­றுத்­திய திரு பத்ரா, இந்­தி­யா­வில் நாணய, நிதிக் கொள்­கை­கள் கடும் கட்டுப்­பா­டு­களை எதிர்­நோக்­கி­யுள்­ள­தா­க­வும் குறிப்­பிட்­டார்.

"இவ்­வாண்­டின் முதல் காலாண்­டில் வரி வரு­வாய் 32% குறைந்­து­விட்­டது. இதன் விளை­வாக, ஏப்­ரல் -ஆகஸ்ட் வரை­யி­லான கால­கட்­டத்­தில் மத்­திய அர­சுக்கு 121.9% வரு­வாய்ப் பற்­றாக்­குறை ஏற்­பட்­டது. தொடர்ந்து மூன்று மாதங்­க­ளா­கப் பண­வீக்­கமும் 6 விழுக்­காட்­டிற்கு மேல் இருக்கிறது. இத்­த­கைய சூழ­லில், வளர்ச்­சியை முடுக்கி­வி­டு­வதற்­கான கட்­ட­மைப்­புச் சீர்­தி­ருத்­தங்­கள் தேவை," என்­றார் திரு பத்ரா.

ஏப்­ரல் முதல் ஜூன் வரை­யிலான இரண்­டாம் காலாண்­டில் இந்­தி­யப் பொரு­ளி­யல் 23.9% வீழ்ச்­சி­ய­டைந்த நிலை­யில், ஒட்­டு­மொத்­த­மாக நடப்­பாண்­டில் பொரு­ளி­யல் 9.5% சரி­ய­லாம் என மத்­திய வங்கி கணித்­து உள்­ளது.

இம்­மா­தத் தொடக்­கத்­தில் நடந்த நாண­யக் கொள்­கைக் குழுக் கூட்­டத்­தில் திரு பத்ரா இக்­க­ருத்­து­களை முன்­வைத்­தார். இந்த விவ­ரங்­கள் நேற்று முன்­தி­னம்­தான் வெளி­யி­டப்­பட்­டன. அக்­கூட்­டத்­தில், பொரு­ளி­யல் மீட்சி குறித்து உறுப்­பி­னர்­கள் தங்­க­ளுக்­குள் முரண்­பட்­ட­தா­கக் கூறப்படு­கிறது.

நடைமுறை யதார்த்­தத்­தைப் புரிந்­து­கொண்டு கவ­ன­மா­கச் செயல்­பட வேண்­டும் என திரு பத்ரா வலி­யு­றுத்­திய நிலை­யில், இவ்­வாண்டு இறு­திக்­குள் நாட்­டின் பொரு­ளி­யல் வலு­வாக மீண்­டெ­ழும் என மத்­திய வங்­கி­யின் ஆளு­நர் சக்­தி­காந்த தாஸ் நம்­பிக்கை தெரி­வித்­துள்­ளார்.