கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள அனந்தபுரா கிராமத்தில் பெருமாள் கோவில் ஒன்று உள்ளது.
இக்கோவில் வளாகத்துக்குள் உள்ள குளத்தில் 70 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு முதலை வாழ்ந்து வருகிறது.
பாபியா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த முதலை மாமிச உண்ணியாக இருந்தபோதிலும் குளத்தில் உள்ள மீன்களைக்கூட சாப்பிடுவதில்லை.
மாறாக, சைவ முதலையாக மாறி கோவில் அர்ச்சகர்களும் பக்தர்களும் அளிக்கும் பிரசாதத்தை மட்டுமே உண்டு வாழ்கிறது.
இரவு நேரங்களில் மட்டும் குளத்தில் இருந்து கோவில் வளாகத்திற்குள் வந்து செல்லும் பாபியா முதலை, கடந்த செவ்வாய்க்கிழமை கோவிலின் நமஸ்கார மண்டபத்துக்குள் நுழைந்தபோது அர்ச்சகர் ஒருவருவருடன் சென்ற நபர் அதைப் பார்த்துப் படம் எடுத்துள்ளார்.
பின்னர் சமூக வலைத்தளத்தில் அவர் அந்தப் படத்தைப் பதிவிட்டதை அடுத்து ஏராளமானோர் அதைப் பகிர்ந்து வருகின்றனர்.