இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் மனைவியுடன் அந்தரங்கத்தில் இருந்ததை தொலைபேசி செயலியின் வழியாக நேரலை காணொளி ஒளிபரப்பு செய்துவந்த ஓர் ஆடவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். இத்தகைய ஒளிபரப்புகளின் மூலம் அந்த ஆடவர் பணம் பெறுவதாகவும் கூறப்படுகிறது.
மோசடி செய்து தன்னைத் திருமணம் செய்ததாகக் கூறிய அந்த ஆடவரின் மனைவி இதுகுறித்து போலிசாரிடம் தெரிவித்தார். ஏற்கெனவே தாம் திருமணம் செய்திருப்பதாக மறைத்த அந்த ஆடவர், மனைவியுடன் தாம்பத்திய உறவில் ஈடுபட்டதை அவருக்குத் தெரியாமல் காணெளிப்பதிவு செய்து தமது மனைவியை மிரட்டி மேலும் காணொளிகளுக்காக இத்தகைய செயல்களில் ஈடுபட கட்டபாயப்படுத்தினார்.
போலிசாரின் விசாரணை தொடர்கிறது.