முன் எப்போதும் இல்லாத வகையில் மைசூர் தசரா விழாவில் யானை ஊர்வலம் எளிமையான முறையில் நடைபெற்றது.
கடந்த 17ஆம் தேதி இவ்விழா தொடங்கியது. கொரோனா விவகாரம் காரணமாக இம்முறை விழாவை ஒட்டி நடைபெறும் கலைநிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.
இறுதி நாளான திங்கட்கிழமை அன்று விஜயதசமியை முன்னிட்டு யானைகள் பங்கேற்ற ஊர்வலம் நடைபெற்றது. இரண்டு யானைகள் மட்டுமே பங்கேற்றன. வழக்கமாக ஆயிரக்கணக்கானோர் இந்நிகழ்வில் கலந்துகொள்வர். இம்முறை மிகக் குறைவானவர்களே பங்கேற்றனர்.