தங்கக் கடத்தல் வழக்கில் இந்தியாவின் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயனின் முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கரனை அமலாக்கத் துறை நேற்று கைது செய்தது.
இவ்வாண்டு ஜூலை 5ஆம் தேதி திருவனந்தபுரம் விமான நிலையத்தில் ரூ.14.82 கோடி மதிப்புள்ள 30 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அங்கு உள்ள ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் துணைத் தூதரகத்திற்கு அந்தப் பொட்டலம் வந்ததாகச் சொல்லப்பட்டது.
இந்த விவகாரத்தில் முதன்மைக் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷ், பி.ஆர்.சுரேஷ் ஆகியோருடன் சிவசங்கருக்கு நெருங்கிய தொடர்பிருந்ததாகச் சொல்லப்படுகிறது.
இந்நிலையில், முன்பிணை கேட்டு சிவசங்கரன் தாக்கல் செய்த மனுவைக் கேரள உயர் நீதிமன்றம் நேற்று நிராகரித்துவிட்டது. அதன்பின் சில நிமிடங்களிலேயே, தாம் சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனையில் வைத்து சிவசங்கரன் கைது செய்யப்பட்டார்.