‘முகக்கவசம் அணியாதவர்கள் சாலையை சுத்தம் செய்ய வேண்டும்’

முகக்கவசம் அணியாதவர்களுக்கு சாலையை சுத்தம் செய்ய வைக்கும் நூதன தண்டனையை வழங்கி வருகிறது மும்பை மாநகராட்சி.

இந்திய அளவில் மகாராஷ்டிராவில் தான் கொரோனா பாதிப்பு அதிகளவில் உள்ளது. குறிப்பாக தலைநகர் மும்பையில் அதிக எண்ணிக்கையிலானோர் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

தடுப்பூசி இன்னும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், முகக்கவசம்தான் கொரோனாவைத் தடுக்கும் கவசமாகக் கருதப்படுகிறது.

பொதுவாக முகக்கவசம் அணியாமல் வெளியில் செல்வோரிடம் ரூ.200 அபராதமாக வசூலிக்கப்படுகிறது.

அந்த அபராதத்தைச் செலுத்த மறுப்பவர்கள், கொரோனா பரவல் தடுப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளோரிடம் தேவையின்றி வாக்குவாதம் செய்வோர் ஆகியவர்களை சாலையைச் சுத்தம் செய்யும் பணியில் இறகுக்குவதாக மும்பை மாநகராட்சி உதவி ஆணையர் மோதே தெரிவித்தார்.

இதுவரை சுமார் 35 பேர் இந்த நூதன தண்டனையை நிறைவேற்றியதாகக் கூறப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!