போதைப்பொருள் விவகாரம்: கேரள முன்னாள் அமைச்சர் மகன் அதிரடி கைது

1 mins read
e9436526-4a48-498f-bb5a-0bfa0638a6d1
படம்: ஊடகம் -

திரு­வ­னந்­தபுரம்: போதைப்­பொ­ருள் விற்­ப­னை­யா­ள­ரு­டன் தொடர்பு வைத்­தி­ருந்த குற்­றச்­சாட்­டின் பேரில் கேரள முன்­னாள் உள்­துறை அமைச்­சர் கொடி­யேறி பால­கி­ருஷ்­ண­னின் மகன் பீநேஷ் மத்­திய அம­லாக்­கத் துறை­யால் கைது செய்­யப்­பட்­டுள்­ளார்.

இதை­ய­டுத்து அவர் நீதி­மன்­றத்­தில் முன்­னி­லைப்­ப­டுத்­தப்­பட்­டார்.

கன்­ன­டத் திரை­யு­ல­கில் போதைப்­பொ­ருள் பர­வ­லாக பயன்­ப­டுத்­தப்­ப­டு­வ­தா­கத் தெரி­ய­வந்­துள்­ளது. இது­தொ­டர்­பாக மத்­திய புல­னாய்வு முகமை விசா­ரித்து வரு­கிறது.

போதைப்­பொ­ருள் பயன்­ப­டுத்­திய குற்­றச்­சாட்­டின்­பே­ரில் நடி­கை­கள் ராகினி, அனிகா, சஞ்­சனா கல்­ரானி உள்­ளிட்­டோர் கைதாகி உள்­ள­னர்.

இந்­நி­லை­யில் போதைப்­பொ­ருள் கும்­ப­லு­டன் தொடர்பு வைத்­தி­ருந்­த­தா­கக் கூறி முன்­னாள் அமைச்­சர் கொடி­யேறி பால­கி­ருஷ்­ண­னின் மகன் பீநேஷ் கைது செய்­யப்­பட்­டுள்­ளார்.

நேற்று முன்­தி­னம் விசா­ர­ணைக்­காக அம­லாக்­கத்­துறை அலு­வ­ல­கத்­துக்கு வந்­த­போது அவர் கைது செய்­யப்­பட்­டார்.

பின்­னர் நீதி­மன்­றத்­தில் முன்­னி­லைப்­ப­டுத்­தப்­பட்ட அவரை நான்கு நாட்­கள் காவ­லில் வைத்து விசா­ரிக்க நீதி­பதி அனு­மதி வழங்­கி­னார்.