இருதரப்பு ஒப்பந்தங்களை சீனா மதிக்க வேண்டும்

இருதரப்பு ஒப்பந்தங்களை சீனா மதிக்க வேண்டும்

2 mins read
4dd2e5f7-2c72-4a31-8ca1-0c03e0eb6feb
-

புது­டெல்லி: இந்­திய - சீன உற­வு­கள் கடு­மை­யா­கப் பாதிக்கப்பட்டு உள்ளதாக இந்­திய வெளி­யு­றவு அமைச்­சர் ஜெய்­சங்­கர் தெரி­வித்­துள்­ளார்.

சர்­தார் வல்­ல­பாய் பட்­டேல் பிறந்­த­நா­ளை­யொட்டி உரை­நி­கழ்த்­திய அமைச்­சர் ஜெய்சங்­கர், கடந்த 30 ஆண்­டு­க­ளாக சீனா­வு­டன் நட்­பு­றவு நீடித்து வந்­த­தை­யும், எல்­லை­யில் வெளிப்­ப­டைத்­தன்­மை­யு­டன் இருதரப்­பிலும் நடந்­து­கொண்­ட­தால் அமைதி நீடித்து வந்­த­தை­யும் சுட்­டிக்­காட்­டி­னார்.

அசல் எல்­லைக்­கோட்­டுப் பகு­தியை மாற்­றி­ய­மைக்­கும் பேச்­சுக்கே இட­மில்லை என்­றும் இருதரப்பு ஒப்­பந்­தங்­களை சீனா மதித்­து­ந­டக்க வேண்­டும் என்றும் அவர் வலி­யு­றுத்­தி­னார். படை­கள் முன்பு எந்­தெந்த நிலைப்­பா­டு­களில் குவிக்­கப்­பட்­ட­னவே அங்­கே­தான் இருக்க வேண்­டும் என்று ஜெய்­சங்­கர் திட்­ட­வட்­ட­மா­கத் தெரி­வித்­தார்.

இந்­திய - சீன எல்­லைப்­ப­கு­தி­யில் பதற்­றம் தணிந்து இரு நாடு­களும் இயல்புநிலைக்­குத் திரும்­ப­வேண்­டும். அதற்கு இரு நாடு­க­ளுக்­கும் இடையே உள்ள ஒப்­பந்­தங்­களை சீனா முழு­மை­யாக மதிக்க வேண்­டும் என்று இந்­திய வெளி­யு­றவு அமைச்­சர் ஜெய்­சங்­கர் நேற்று தெரி­வித்­தார்.

சர்­தார் வல்­ல­பாய் பட்­டேலை நினை­வு­கூ­ரும் நிகழ்ச்சி ஒன்­றில் அவர் உரை­யாற்­றி­னார். அப்­போது, சீனா­வுக்­கும் இந்­தி­யா­வுக்­கும் இடை­யே­யுள்ள எல்­லைக்­கோட்டை தன்­னிச்­சை­யாக மாற்­றும் நட­வ­டிக்­கையை இந்­தியா ஒருபோதும் ஏற்­றுக்­கொள்­ளாது என்று கூறி­யுள்­ளார்.

'இந்­தி­யா­வும் கொவிட் நோய்த்­தொற்­றுக்­குப் பிந்­திய உல­க­மும்' என்ற தலைப்­பில் உரை­யாற்­றிய அமைச்­சர், "இந்­தி­யா­வுக்­கும் சீனா­வுக்­கும் உள்ள 30 ஆண்­டு­கால நல்­லு­றவு, கொரோனா நோய்த்­தொற்­றுக்­குப் பின்­னர் கரை­ப­டிந்­துள்­ள­தா­கக் கூறி­னார். அத்­து­டன் இந்த இரு பெரிய நாடு­களும் தங்­கள் எல்­லை­யில் பதற்­றம் தணிந்து அமைதி நிலவ வேண்­டு­மெ­னில் இரு நாடு­க­ளுக்கு இடை­யே­யான எல்­லை தொடர்­பான ஒப்­பந்­தத்தை சீனா முழு­மை­யாக மதித்து நடக்க வேண்­டும் என்று வலியுறுத்தினார்.

இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்