நேப்பாளத்தில் இந்திய ராணுவத் தளபதி கௌரவிக்கப் பட்டுள்ளார். அவருக்கு நேப்பாள நாட்டின் உயரிய பதவி வழங்கப் பட்டுள்ளது.
நேபாள ராணுவ தளபதியின் அழைப்பை ஏற்று இந்திய ராணுவத் தலைமை தளபதி மனோஜ் முகுந்த் நரவானே மூன்று நாள் அரசு முறைப் பயணம் மேற்கொண்டு புதன்கிழமை அன்று நேபாளம் வந்து சேர்தார்.
தலைநகர் காத்மாண்டுவில் தனி விமானத்திலிருந்து இறங்கிய நரவானேவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதையடுத்து நேபாள நாட்டு ராணுவத் தலைமை தளபதி பூர்ண சந்திர தாப்பாவை அவர் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பில் இரு நாடுகளுக்கு இடையிலான நட்பு மற்றும் ஒத்துழைப்பை வலுபடுத்தும் வழிகள் குறித்து இருவரும் ஆலோசித்தனர்.
பின்னர் நேபாள அதிபர் பித்யா தேவி பண்டாரியை ராணுவத் தளபதி நரவானே சந்தித்துப் பேசினார்.
அப்போது நேபாள ராணுவத்தின் கௌரவ ஜெனரல் பதவியை நரவானேவுக்கு அதிபர் பித்யா தேவி வழங்கி கௌரவித்தார்.
அதற்கான பதக்கம், சான்றிதழ் மற்றும் வீரவாள் அவருக்கு வழங்கப்பட்டன.
இந்த விழாவில் நேபாள பிரதமர் ஒலி, இந்திய தூதர் வினய் குவாத்ரா மற்றும் இரு நாட்டின் மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

