காற்று தரம் மோசமடைந்தால் கிருமி வேகமாகப் பரவும்

1 mins read

புது­டெல்லி: இந்­தி­யா­வின் பல்­வேறு பகு­தி­களில் அண்­மைக்­கா­ல­மாக காற்று மாசு மோச­மான நிலையை எட்­டி­யுள்­ளது. முக்­கி­ய­மாக, தலை­ந­கர் டெல்­லி­யில் காற்­றின் தரம் மோச­மான தர­நி­லை­யில் இருப்­ப­தாக ஆய்­வு­கள் கூறு­கின்­றன.

இந்­நி­லை­யில், காற்று மாசு­பாட்­டால் கொவிட்-19 கிரு­மித்­தொற்று வேக­மா­கப் பர­வும் ஆபத்து அதி­க­ரிக்­கும் என்று மத்­திய சுகா­தா­ரத் துறை அதி­கா­ரி­கள் எச்­ச­ரித்­துள்­ள­னர்.

காற்று மாசு­பாட்­டைக் கட்­டுப்­ப­டுத்த டெல்லி, உத்­த­ரப் பிர­தே­சம், ஹரி­யானா, பஞ்­சாப் ஆகிய மாநில அர­சு­கள் எடுத்­துள்ள நட­வ­டிக்­கை­கள் குறித்து ஆலோ­சிக்க பாஜக எம்பி ஜக­தாம்­பிக பால் தலை­மை­யில் நாடா­ளு­மன்­றக் குழு ஒன்று அமைக்­கப்­பட்­டது.

இக்­கு­ழு­வி­டம் மத்­திய சுகா­தா­ரத் துறை அதி­கா­ரி­கள் வெள்­ளிக்­கி­ழமை அறிக்கை ஒன்றை சமர்ப்­பித்­த­னர். "காற்­றின் மோச­மான தரத்­தால் சளி மூலம் வெளி­யா­கும் சுவா­சத் துளி­களில் உள்ள கிருமி நீண்ட நேரத்­துக்கு காற்­றி­லேயே உயிர்­வாழ முடி­யும் என்­ப­தால் கொரோனா தொற்று அதி­க­ரிப்­ப­தற்­கான வாய்ப்­பு­கள் அதி­கம்," என்று அந்த அறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.

மேலும், காற்று மாசு­பாட்­டால் இந்­தி­யர்­க­ளின் உடல்­ந­ல­மும் சுகா­தா­ர­மும் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக அறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

உல­கின் மிக மோச­மாக மாசு­

ப­டுத்­தப்­பட்ட 30 நக­ரங்­களில் 21 நக­ரங்­கள் இந்­தி­யா­வில் இருப்­ப­தா­க­வும் இந்த அறிக்­கை­யில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

இந்­தி­யா­வில் இது­வரை 84.1 லட்­சத்­துக்­கும் மேற்­பட்ட மக்கள் கொரோ­னா­ கிருமியால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். அவர்­களில் 77.70 லட்­சத்­துக்­கும் மேற்­பட்­டோர் குண­

ம­டைந்­துள்­ள­னர். 1.25 லட்­சத்­துக்­கும் மேற்­பட்­டோர் உயி­ரி­ழந்­து­விட்­ட­னர்.