தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

200 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் பரிதாப பலி; சடலமாக மீட்பு

1 mins read
7245aa9f-5499-4b51-a542-b203cb2b4bb5
பிரகலாத். படம்: ஊடகம் -

போபால்: 200 அடி ஆழ­முள்ள ஆழ்­துணை கிணற்­றில் தவறி விழுந்த ஐந்து வயது சிறு­வனை நான்கு நாட்­க­ளுக்­குப் பிறகு சட­ல­மாக மட்­டுமே மீட்க முடிந்­தது. இச்­சம்­ப­வம் மத்­தி­யப் பிர­தே­சத்­தில் சோகத்தை ஏற்­ப­டுத்தி உள்­ளது.

அங்­குள்ள சேது­பு­ரா­பரா கிரா­மத்­தைச் சேர்ந்த ஹரி­கி­ருஷ்­ண­னின் ஐந்து வயது மகன் பிர­க­லாத் கடந்த 4ஆம் தேதி வீட்­டிற்கு வெளியே விளை­யா­டிக் கொண்­டி­ருந்­தான்.

அங்­குள்ள ஆழ்­துளை கிணறு மூடப்­ப­டா­மல் இருந்­த­தைக் கவ­னிக்­காத சிறு­வன் அதில் தவறி விழுந்­தான்.

சிறு­வ­னின் அழு­கு­ரல் சத்­தத்தை வைத்தே அவன் கிணற்­றுக்­குள் விழுந்­தது தெரிய வந்­தது. இதை­ய­டுத்து காவல்­துறை, தீய­ணைப்­புத் துறை­யி­ன­ரு­டன் ராணு­வத்­தி­ன­ரும் மீட்­புப் பணி­யில் ஈடு­பட்­ட­னர். கடந்த மூன்று நாட்­க­ளாக இரவு பக­லாக மீட்­புப் பணி நடந்து வந்­தது.

இந்­நி­லை­யில் நேற்று அதி­காலை சிறு­வன் பிர­க­லாத் மீட்­கப்­பட்­டான். எனி­னும் மருத்­து­வ­ம­னைக்கு அழைத்­துச் செல்­லப்­பட்ட பின்­னர் சிறு­வனை பரி­சோ­தித்த மருத்­து­வர்­கள் அவன் ஏற்­கெ­னவே இறந்­து­விட்­ட­தாக தெரி­வித்­த­னர்.

இத­னால் மீட்­புப் பணி­யில் ஈடு­பட்­ட­வர்­களும் கிராம மக்­களும் சோகத்­தில் மூழ்­கி­னர். இந்தியாவில் இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன.