55 பெண் ஆயுள் கைதிகள் விடுவிப்பு: ஆந்திர அரசு அறிவிப்பு

1 mins read

அம­ரா­வதி: பல்­வேறு வழக்­கு­களில் சிக்கி ஆயுள் தண்­டனை அனு­ப­வித்­து­வ­ரும் 55 பெண்­களை விடு­தலை செய்ய ஆந்­தி­ரப்­பி­ர­தேச அரசு முடிவு செய்­துள்­ளது.

கடந்த ஐந்து ஆண்­டு­க­ளாக சிறை­வா­சம் அனு­ப­வித்து வரும் பெண்­கள் விடு­விக்­கப்­பட இருப்­ப­தாக ஊட­கத் தக­வல் தெரி­விக்­கிறது.

இது வர­லாற்­றுச் சிறப்பு வாய்ந்த நட­வ­டிக்கை என ஆந்­திர உள்­துறை அமைச்­சர் மேக­தொட்டி சுச­ரிதா தெரி­வித்­துள்­ளார்.

ஆந்­தி­ரா­வில் தற்­போது 147 பெண் கைதி­கள் சிறை­வா­சம் அனு­ப­வித்து வரு­கின்­ற­னர். ஆயுள் கைதி­க­ளான இவர்­களில் 55 பெண்­கள் கடந்த ஐந்து ஆண்­டு­க­ளாக சிறை­யில் அடைக்­கப்­பட்­டுள்­ள­னர்.

இவர்­க­ளுக்கு ஆயுள் தண்­டனை விதிக்­கப்­பட்ட போதி­லும் குற்­றச்­செ­யல்­களில் அதி­கம் பங்கு இல்­லா­த­வர்­க­ளாக உள்­ள­னர் என்று அமைச்­சர் சுச­ரிதா கூறி­யுள்­ளார்.

சூழ்­நி­லை­யால் இப்­பெண்­கள் குற்­ற­வா­ளி­க­ளாக மாறி­யுள்­ள­னர். எந்­தக் குற்­றச் செய­லுக்­காக தண்­டிக்­கப்­பட்­ட­னரோ அக்­குற்றத்தை அவர்­கள் மீண்­டும் செய்­யும் வாய்ப்பு குறைவு என்­றும் அமைச்­சர் மேக­தொட்டி சுச­ரிதா கூறி­னார்.

"55 பேரை விடு­தலை செய்­வது குறித்து தீவி­ர­மா­கப் பரி­சீ­லிக்­கப்­படும். அடுத்த வாரம் அவர்­கள் விடு­விக்­கப்­ப­டு­வார்­கள் என நம்­பு­கி­றேன். தற்­போது எடுத்­துள்ள வர­லாற்­றுச் சிறப்பு வாய்ந்த முடி­வால் அது மீண்­டும் நிரூ­பிக்­கப்­பட்­டுள்­ளது. மக­ளிரை சிறை­யி­லி­ருந்து விடு­விப்­பது சமூ­கத்­துக்­குப் பல­ன­ளிக்­கும்," என்­றார் அமைச்­சர் மேக­தொட்டி சுசரி­தா.