தனிமை முகாமில் அர்னாப் விதி மீறியதாகப் புகார்

தனிமை முகாமில் அர்னாப் விதி மீறியதாகப் புகார்

1 mins read
7100d8ea-f18a-44f6-8f1c-95246367b6bb
படம்: ஊடகம் -

ரிபப்­ளிக் தொலைக்­காட்­சி­யின் தலை­மைச் செய்­தி­யா­சி­ரி­யர் அர்­னாப் கோஸ்­வாமி தனிமை முகா­மில் தடுத்து வைக்­கப்­பட்­ட­போது விதி­மு­றையை மீறி கைபே­சி­யைப் பயன்­ப­டுத்­தி­ய­தாக புகார் எழுந்­துள்­ளது. இதை­ய­டுத்து அவர் தாலோஜா சிறைக்கு மாற்­றப்­பட்­டார்.

கட்­டட உள்­அ­லங்­கார வடி­வ­மைப்­பா­ளர் ஒரு­வர் உயிரை மாய்த்­துக் கொண்­டது தொடர்­பான வழக்­கில் அர்­னாப் கைதா­கி­யுள்­ளார். பின்­னர் கொரோனா அச்­சு­றுத்­தல் கார­ண­மாக அலி­பாக் பகு­தி­யில் தற்­கா­லிக சிறை­யாக மாற்­றப்­பட்­டுள்ள பள்ளி ஒன்­றில் அவர் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­டார்.

இந்­நி­லை­யில் தனிமை முகா­மில் அவர் கைபே­சி­யைப் பயன்­படுத்­தி­ய­தாக போலி­சார் குற்­றம் சாட்­டி­யுள்­ள­னர். இது­தொ­டர்­பாக விசா­ரணை நடப்­ப­தா­க­வும் அலி­பாக் காவல்­துறை தெரி­வித்­தது. இதற்கிடையே அர்னாப்பின் பிணை மனுவை மும்பை உயர் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.