கின்னஸ் சாதனையை முயற்சியின்போது இந்திய ஆயுதப் படையின் ‘டொர்னாடோஸ்’ மோட்டார் சைக்கிள் சாகச அணியைச் சேர்ந்த கேப்டன் சிவம் சிங் நூலிழையில் உயிர் தப்பினார்.
அவர் நெருப்பு வளையத்துக்குள் 127 கிலோ மீட்டர் தூரம் மோட்டார் சைக்கிளில் ஓடி 2014ல் தென்னாப்ரிக்காவில் என்ரிகோ ஷோமேன், ஆண்ட்ரே இருவரும் நிகழ்த்திய 120.40 மீட்டர் சாதனையை நேற்று முறியடித்தார்.
பெங்களூரில் நடந்த இச்சம்பவத்தில் அவருக்கு சிறு தீக்காயங்கள் ஏற்பட்டன. ‘டொர்னாடோஸ்’ குழு திங்கள், செவ்வாய் இருநாட்களில் ஒன்பது சாதனைகளை முறியடித்துள்ளன.