பரபரப்பான தேர்தலில் பாஜக கூட்டணிக்கு இறுதி வெற்றி

பரபரப்பான தேர்தலில் பாஜக கூட்டணிக்கு இறுதி வெற்றி

2 mins read
ce3c25f3-bbc3-40e4-8054-4fe72e58f62a
படம்: இந்திய ஊடகம் -

இறு­தி­வரை பர­ப­ரப்­பான சூழ­லில் நிகழ்ந்த பீகார் தேர்­தல் வாக்கு எண்­ணிக்கை பாஜக கூட்­ட­ணி­யின் வெற்­றி­யு­டன் முடிந்­தது.

மொத்­தம் 243 உறுப்­பி­னர்­க­ளைக் கொண்ட பீகார் சட்­ட­ச­பை­யில் பாஜக கூட்­ட­ணிக்கு 125 இடங்­கள் கிடைத்­த­தன் மூலம் பீகார் மாநிலத்தை இந்­தி­யப் பிர­த­மர் மோடி தலை­மை­யி­லான பாஜக கூட்­டணி தக்­க­வைத்­துக் ெகாண்­டுள்­ளது.

இந்­தக் கூட்­ட­ணியை எதிர்த்­துப் போட்­டி­யிட்ட முன்­னாள் பீகார் முதல்வர் லாலு பிர­சாத் யாத­வின் புதல்வர் தேஜஸ்வி யாதவ் தலை­மை­யி­லான, காங்­கி­ரஸ் கட்­சியை உள்­ள­டக்­கிய, மாபெ­ரும் கூட்­டணி 110 இடங்­களை மட்­டுமே வெல்ல முடிந்தது.

கொவிட்-19 கொள்­ளை­நோய் 8.5 மில்­லி­யன் மக்­களை பாதித்­தது ஒரு­ பு­றம், இந்­தியா இது­வரை கண்­டி­ராத பொரு­ளி­யல் வீழ்ச்சி இன்னொரு புறம் என இந்­தியா பெரும் நெருக்­க­டியைச் சந்­தித்து வரும் நிலை­யில் மோடி­யின் பாஜக கூட்­ட­ணிக்கு இந்­தத் தேர்­தல் பெரும் சவா­லாக அமைந்­தது.

பீகார் மாநில மக்­க­ளுக்கு தமது நன்­றி­யைத் தெரி­வித்த மோடி, இது ஜன­நா­ய­கத்­துக்கு கிடைத்த ெவற்றி என டுவிட்­ட­ரில் பதி­விட்டார்.

இந்­தி­யா­வின் மிக ஏழ்­மை­யான மாநி­ல­மான பீகா­ரில் எந்­த­வொரு ஐரோப்­பிய நாட்­டி­லும் இல்­லாத அள­வுக்கு மக்­கள் தொகை உள்ளது. இந்­திய நாடா­ளு­மன்­றத்­துக்கு 40 பிர­தி­நி­தி­க­ளைத் தேர்ந்­தெ­டுக்­கும் இந்த மாநி­லத்­துக்கு பெரும் அர­சி­யல் முக்­கி­யத்­து­வம் உள்­ளது கண்­கூடு.

கடந்த ஆண்டு இந்­தி­யப் பொதுத் தேர்­த­லில் பாஜக மாபெ­ரும் வெற்றி பெற்ற பிறகு நடை­பெற்ற பல மாநிலத் தேர்­தல்­களில் அக்­கட்சி சறுக்­கி­யுள்­ளது.

மகா­ராஷ்­டிர தேர்­தல் முடி­வில் அங்கு கூட்­ட­ணிக் கட்­சி­யான சிவ­சே­னை­யு­டன் ஏற்­பட்ட தக­ரா­றில் கூட்­டணி முறிந்து அது ஆட்­சி­யைப் பறி­கொ­டுத்­தது. ராஜஸ்­தான், ஜார்­கண்ட் போன்ற மாநி­லங்­க­ளி­லும் பாஜக ஆட்­சிைய இழந்­தது.

இந்­நி­லை­யில், பீகா­ரில் கூட்­ட­ணிக் கட்­சி­யான ஐக்­கிய ஜனதா தளத்­தின் வேட்­பா­ளர்­களில் பலர் தோல்­வி­ய­டைந்து அதி­கப்­ப­டி­யான பாஜக வேட்­பா­ளர்­கள் வென்­றுள்ள நிைலயில் பீகா­ரில் இது­நாள் வரை இருந்த நிலைமை மாறி அங்கு ஆளும் கூட்­ட­ணி­யில் பாஜ­க­வின் கை ஓங்­கி­யுள்­ள­தாக அர­சி­யல் கவ­னிப்­பா­ளர்­கள் கூறு­கின்­ற­னர்.

அத்­து­டன், தேர்­த­லில் 75 இடங்­களை வென்­றுள்ள தேஜஸ்வி யாத­வின் ராஷ்­டி­ரிய ஜனதா தளம் பீகார் சட்­ட­ச­பை­யில் தனிப்­பெ­ரும் கட்­சி­யாக உரு­வெ­டுத்­துள்­ளது கவ­னிக்­கத்­தக்­கது.

திரு தேஜஸ்பி யாத­வின் தேர்தல் கூட்­டங்­க­ளுக்கு பெரும் திர­ளான மக்­கள் கூடிய நிலை­யில் பீகா­ரில் அர­சி­யல் மாற்­றம் நிக­ழக்­கூ­டும் என பல­ரும் எதிர்­பார்த்­தனர்.

ஆனால், பீகா­ரில் 1990ஆம் ஆண்டிலிருந்து 2005ஆம் ஆண்­டு­ வரை ஆட்­சி­யி­லி­ருந்த முன்­னாள் முதல்­வர்­களும் தேஜஸ்வி யாத­வின் தந்தை, தாயுமான லாலு பிர­சாத் யாதவ், ராப்ரி தேவி ஆகி­யோ­ரின் ஆட்சி மீது மக்­க­ளுக்கு ஏற்­பட்ட அதி­ருப்தி பாஜக கூட்­ட­ணிக்கு கைகொ­டுத்­துள்­ள­தாக கூறப்­ப­டு­கிறது. இந்த வெற்றியை தமிழகம் கவனிக்க வேண்டும் என கவனிப் பாளர்கள் கூறுகின்றனர். ஐக்­கிய ஜனதா தளத்­து­டன் சிறிய பங்காளிக் கட்சியாக இணைந்த பாஜக இன்று அக்­கட்­சி­யை­விட அதிக இடங்­க­ளைக் கைப்­பற்­றும் அள­வுக்கு சூழலை தனக்கு சாத­க­மாக மாற்­றி­யுள்­ளதை கவனத்தில் கொள்ள வேண்டும் என அவர்கள் கருத்து ரைத்துள்ளனர்.