106 நாளில் கொரோனா சாதனை

1 mins read
591556c4-db6c-4e46-bb45-80fe5101e0e9
படம்: இபிஏ -

மத்­திய சுகா­தார அமைச்­ச­கம் வெளி­யிட்டு உள்ள தக­வ­லில், "கொரோனா கிரு­மிப் பர­வ­லுக்கு எதி­ரான போரின் மத்­தி­யில் ஒரு மகத்­தான சாத­னை­யாக 106 நாட்­க­ளுக்­குப் பிறகு முதல்­மு­றை­யாக சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயா­ளி­க­ளின் எண்­ணிக்கை 5 லட்­சத்தைவிடக் குறைந்து உள்­ளது. தொற்று பாதிப்­பு­டன் 4 லட்­சத்து 94 ஆயி­ரத்து 657 பேர் சிகிச்­சை­யில் உள்­ள­னர்.

"ஆகஸ்ட் 7ஆம் தேதிக்­குப் பிறகு முதல் தட­வை­யாக சிகிச்சை பெறும் நோயா­ளி­க­ளின் எண்­ணிக்கை குறைந்து உள்­ளது," என கூறி உள்­ளது.

பல நாடு­களில் கொரோனா பாதிப்­பால் சிகிச்சை பெற்­று­வ­ரு­ப­வர்­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரித்­துக்கொண்டு இருப்­ப­தா­கக் கூறப்படும் நிலையில் இந்­தி­யா­வில் சிகிச்சை பெறு­ப­வர்­க­ளின் எண்­ணிக்கை குறைந்துள்­ளது.

இது குறித்து சுகா­தா­ர அமைச்­ச­கம் தனது டுவிட்­ட­ரில், "இந்த மைல்­கல் சாதனை மத்­திய அர­சின் நீடித்த, தரப்­ப­டுத்­தப்­பட்ட, இலக்கு வைக்­கப்­பட்ட உத்தி ஆகும். மேலும் மாநி­லங்­கள், யூனி­யன் பிர­தே­சங்­க­ளின் திற­மை­யான செயல்­பா­டு­கள், மருத்­து­வர்­கள் மற்­றும் பிற எல்லா கொரோனா வீரர்­க­ளின் அர்ப்­ப­ணிப்பு ஆகி­ய­வற்­றால் சாத்­தி­ய­மா­னது," என்று தெரி­வித்­துள்­ளது.

இந்தியாவில் நேற்றுக் காலை நிலவரப்படி மொத்தம் 86,35,754 பேருக்கு கிருமித் தொற்று உறுதி செய்யப்பட்டு அவர்களில் 80,11,844 பேர் குணமடைந்து வீடு திரும்பி விட்டனர். 1,27,615 பேர் உயிரிழந்த னர். கேரளாவில் நேற்று முன்தினம் 6010 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் 28 பேர் ஒரேநாளில் மாண்டனர்.