புதுடெல்லி: இந்திய-சீன மோதலை மற்ற நாடுகள் தங்களுடைய அரசியல் ஆதாயத்துக்காக பயன்படுத்தும் அபாயம் உள்ளதாக ரஷ்யா எச்சரித்துள்ளது. இந்தியாவுக்கான ரஷ்ய துணைத் தூதர் ரோமன் பாபுஷ்கின் நேற்று முன்தினம் இணையம் வழியாக பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், ஆசிய கண்டத்தில் இரு பெரும் நாடு களான இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே பதற்றம் நிலவுவது இயல்பாகவே எங்களுக்கு கவலையளிக்கிறது என்றார்.
"இரு நாடுகளும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு, பிரிக்ஸ் ஆகிய அமைப்புகளில் உறுப்பினர்களாக உள்ளன. இதுபோன்ற அனைத்துலக அமைப்புகளில் ஒத்துழைக்க வேண்டி இருக்கும்போது, பேச்சுவார்த்தைதான் நல்ல வழிமுறை. உலகம் முழுவதும் நிச்சயமற்ற தன்மை நிலவி வரும்போது, இந்தியா-சீனா இடையிலான பதற்றம், இந்த வட்டாரத்தில் நிலையற்ற தன்மையை உரு வாக்கி விடும்," என்று அவர் குறிப்பிட்டார்.
"இரு நாடுகளும் ஆக்கபூர்வ பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதை நாங்கள் ஊக்குவிக்கிறோம்," என்றும் ரோமன் பாபுஷ்கின் வலியுறுத்தினார்.

