மோடி: சீண்டினால் மிகக் கடுமையான பதிலடி

மோடி: சீண்டினால் மிகக் கடுமையான பதிலடி

2 mins read
c25cf6ed-4c58-4a22-8b9c-f7b30b681e7e
-

இந்­தி­யாவை யாரா­வது சீண்­டிப்­பார்த்­தால் மிகக்­க­டு­மை­யான பதி­லடி கொடுக்­கப்­படும் என்று பிர­த­மர் நரேந்­திர மோடி எச்­ச­ரித்­தார்.

திரு மோடி, 2014ஆம் ஆண்டு பிர­த­மர் பதவி ஏற்­றது முதல் ஆண்டு­தோ­றும் எல்­லை­ வீரர்­களுடன் தீபா­வளிப் பண்­டி­கை­யைக் கொண்­டாடி வரு­கி­றார். இந்த ஆண்டு தீபா­வ­ளியை அவர் ராஜஸ்­தான் ஜெய்­சல்­மா­ரில் உள்ள லாங்­கே­வாலா பகு­தி­யில் வீரர்­க­ளு­டன் கொண்­டா­டி­னார்.

வீரர்­க­ளுக்கு இனிப்­பு­களை வழங்கி, அவர்­க­ளு­டன் கலந்­து­ரை­யாடி, அவர்­களை ஊக்­கப்­ப­டுத்தி உரை­யாற்­றிய பிர­த­மர், வீரர்­க­ளைச் சந்­திக்­கும் போது­தான் தனக்கு தீபா­வளி நிறை­வ­டைந்­த­து­போல் இருப்­ப­தா­கத் தெரி­வித்­தார்.

இந்­திய எல்­லை­யைக் காக்­கும் பணி­யில் இருக்­கும் வீரர்­களை உல­கின் எந்த சக்­தி­யா­லும் தடுக்க முடி­யாது என்று குறிப்­பிட்ட திரு மோடி, இன்­றைய இந்­தியா மற்ற நாடு­க­ளைப் புரிந்­து­கொள்­வ­தை­யும் புரிந்­து­கொள்­ளும் கொள்­கை­யை­யும் நம்­பு­வ­தா­கத் தெரி­வித்­தார்.

ஆனால், இந்­தி­யாவை யாரேனும் சீண்­டிப்­பார்க்க முயன்­றால் அவர்­களுக்கு மிகக்­க­டு­மை­யான, உக்­கி­ர­ம­மான பதி­லடி கொடுக்­கப்­படும் என்று அவர் சூளு­ரைத்­தார்.

"புதுமை மூலம் புத்­திக்­கூர்மை கூடும் என்­ப­தால் வீரர்­கள் புத்­தாக்­கத்­தில் ஈடு­பட வேண்­டும்; இரண்­டா­வது யோகா பயிற்சி; மூன்­றா­வது தாய்­மொழி மற்­றும் ஆங்­கி­லத்­தைத் தவிர வேறு மொழி­யைக் கற்­றுக்­கொள்­ளுங்­கள். இது புதிய கண்­ணோட்­டங்­க­ளை­யும் உற்­சா­கத்­தை­யும் வளர்க்க உத­வும்," என்று வீரர்­களுக்குப் பிர­த­மர் மூன்று யோச­னை­க­ளைத் தெரி­வித்­தார்.

பயங்­கர­வா­தி­க­ளை­யும் பயங்­கர வாதத் தலை­வர்­க­ளை­யும் அவர்களின் இருப்­பி­டத்­துக்­குள்ளே சென்று இந்­தியா கொன்­று­வி­டும் என்­பது உல­கிற்கே தெரி­யும் என்­றா­ர­வர்.

இத­ற்கி­டையே, ஜம்மு-காஷ்­மீர் எல்­லைக் கட்­டுப்­பாட்­டுப் பகு­தி­யில் போர் நிறுத்த ஒப்­பந்­தத்தை மீறி பாகிஸ்­தான் ராணு­வம் அத்­து­மீ­றித் தாக்­கு­தல் நடத்­தி­யதை அடுத்து, அந்­நாட்டு தூத­ருக்கு அழைப்பாணை அனுப்பி மத்­திய வெளி­யு­ற­வுத்­துறை அமைச்சு கடும் கண்­ட­னத்­தை­யும் எதிர்ப்­பை­யும் தெரி­வித்­தது.