இந்தியாவில் 750 மில்லியனை தாண்டிய இணையத் தொடர்பு

2 mins read
2ce7b728-714c-4d69-9271-636555ee1683
-

இந்­தி­யா­வில் இணை­யச் சேவை பொதுப் பயன்­பாட்­டிற்கு வந்து 25 ஆண்­டு­கள் ஆகி­விட்ட நிலை­யில், இது­வரை அந்த இணைப்­பு­க­ளின் எண்­ணிக்கை புதிய மைல்­கல்­லான 750 மில்­லி­ய­னைத் தாண்­டி­விட்­ட­தாக இந்­திய தொலைத்­தொ­டர்பு ஒழுங்­கு­முறை ஆணை­யத்­தின் ஆக அண்­மைய தக­வல்­கள் கூறு­கின்­றன.

இந்­தி­யா­வில் 1995ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி இணை­யச் சேவை பொதுப் பயன்­பாட்­டிற்கு வந்­தது.

2015ல் 'டிஜிட்­டல் இந்­தியா' திட்­டம் தொடங்­கப்­பட்­டது. அதை­ய­டுத்து கடந்த 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடத்­தப்­பட்ட கணக்­கெ­டுப்­பின்­படி, இந்­தி­யா­வில் 340 மில்­லி­யன் இணையத் தொடர்பு­கள் ஏற்படுத்தப்பட்டு இருந்­தன. ஆனால், கடந்த நான்கு ஆண்­டு­களில் இந்த எண்­ணிக்கை இரு மடங்­கிற்­கும் அதி­க­மா­கி­விட்­டது.

இந்­தி­யா­வின் மொத்த இணைய வச­தி­யில் தமி­ழ­கம், கர்­நா­டகா, தெலுங்­கானா, குஜ­ராத், மகா­ராஷ்­டிரா ஆகிய ஐந்து மாநி­லங்­க­ளின் பங்கு மட்­டும் 35 விழுக்­காடு.

இணையத் தொடர்பு­களில் பெரும்­பா­லா­னவை நகர்ப்­பு­றப் பகு­தி­களில் உள்­ளன. பல­ரும் கைபே­சி­களில் இணைய வச­தி­யைப் பயன்­ப­டுத்­து­கின்­ற­னர்.

இந்­திய கைபேசி சேவை நடத்­து­நர்­கள் சங்­கத்­தின் தலைமை இயக்­கு­ந­ரான திரு எஸ்.பி. கோக்­கர், ஏரா­ள­மா­னோர் கைபே­சி­களில் இணை­யச் சேவை­யைப் பயன்­ப­டுத்­தி­னா­லும், இணை­யக் கட்­ட­மைப்பு வசதி ஏறத்­தாழ 50 விழுக்­காட்­டி­லேயே இருப்­ப­தா­க­வும் இந்த நிலை மேம்­பட வேண்­டும் என்­றும் கூறி­னார்.

"இன்­னும் கூடு­த­லான கட்­ட­மைப்பு வச­தி­கள் செய்­யப்­பட வேண்­டும். இணைய வசதி விலை கட்டுப்­ப­டி­யாக இருக்­கும் அதே வேளை­யில், சேவை­த் தர­மும் குறை­யா­மல் இருப்­பது உறுதி செய்­யப்­பட வேண்­டும்," என்­றார் அவர்.

இந்­தி­யா­வில் மற்ற தொழில்­துறை­க­ளை முன்னேற்றும் துறையாக தொலைத்­தொ­டர்­புத் துறை விளங்­கு­வ­தா­கச் சொன்ன திரு கோக்­கர், இதை அடித்­த­ளத் துறை­யா­கக் கருதி அர­சாங்­கம் அதற்கு மேலும் ஆத­ரவு நல்க வேண்­டும் என்று வலி­யு­றுத்­தி­னார்.

ஐஐடி-பெங்­க­ளூர் கழ­கத்­தைச் சேர்ந்த பேரா­சி­ரி­யர் தேபா­பி­ரதா தாஸ், "கொவிட்-19 சூழ­லில் இணை­யத்­தின் முக்­கி­யத்­து­வம் பன்­ம­டங்கு அதி­க­ரித்­துள்­ளது. கல்வி, நிதி, சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு உள்­ளிட்ட பல துறை­க­ளி­லும் இணை­யச் சேவை பயன்­பாடு கணி­ச­மாக அதி­க­ரித்­துள்­ளது.

எனவே, இணை­யச் சேவை அத்­தி­யா­வ­சிய சேவை­யாக உள்­ளது என்று கூறி­னால் அது மிகை­யா­காது," என்று கருத்­து­ரைத்­தார்.

இவ்­வாண்டு ஜூன் 30ஆம் தேதி நில­வ­ரப்­படி, இந்­தி­யா­வில் ரிலை­யன்ஸ் ஜியோ நிறு­வ­னமே சந்­தை­யில் பெரும் பங்கு வகித்­த­தாக வேறொரு தக­வல் தெரி­விக்­கிறது. அதற்கு அடுத்­த­டுத்த நிலை­யில் ஏர்­டெல், வோடோ­ஃபோன் நிறு­வ­னங்­கள் வரு­கின்­றன.

இந்­தி­யா­வில் இணையத் தொடர்பு­க­ளின் மொத்த எண்­ணிக்கை 750 மில்­லி­ய­னைக் கடந்­து­விட்­டா­லும், இணை­யத்­தைப் பயன்­ப­டுத்­து­வோ­ரின் எண்­ணிக்­கை­யும் அதே அளவு என்று கூறி­விட முடி­யாது என்­கின்­ற­னர் தொலைத்­தொ­டர்பு நிபு­ணர்­கள்.

அந்நாட்டில் தற்­போது 475 மில்­லி­யன் பேர் இணை­யச் சேவை­யைப் பயன்­ப­டுத்­து­வர் என்­பது அவர்­களின் கணிப்பு.