பீகார் மாநிலத்தின் 37வது முதல்வராக நிதிஷ்குமார் பதவி யேற்றார். அவருக்கும் அவரது அமைச்சர்களாகப் பொறுப்பேற்க உள்ள 13 பேருக்கும் ஆளுநர் பாகு சௌஹான் நேற்று மாலை பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்துவைத்தார்.
இந்நிகழ்வில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் பாஜக தேசியத் தலைவர் ஜெகத் பிரகாஷ் நட்டாவும் பங்கேற்றதாக ஏஎன்ஐ ஊடகம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், பீகாரில் இரு வரை துணை முதல்வர் பதவியில் நியமிக்க பாஜக முடிவு செய்து, அதன்படி தார்கிஷோர் பிரசாத், ரேணுதேவி ஆகிய இருவருக்கும் துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளதாகவும் அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
இதற்கிடையே, தனது தேர்தல் தோல்விக்கு ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும்தான் காரணம் என்று ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தேஜஸ்வி யாதவ் குற்றம்சாட்டி உள்ளார்.
பீகார் மாநிலத்தில் அண் மையில் நடைபெற்ற தேர்தலில் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ் மகத்தான வெற்றிபெற்று முதல்வ ராவார் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், 15 இடங்கள் குறைவாகப் பெற்றதால் அவரது வெற்றி கைநழுவி உள்ளது.
இந்நிலையில், பீகாரில் 70 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் 70 பொதுக்கூட்டங்களைக் கூட நடத்தவில்லை என்றும் தேர்தல் பணிகள் மலைபோல் குவிந்திருந்த நேரத்திலும் ராகுல் காந்தி சிம்லாவுக்கு கடற்கரை பயணம் சென்றுவந்தார் என்றும் அவர் மூன்று நாட்கள் மட்டுமே பீகாரில் பிரசாரம் செய்தார் என்றும் தேஜஸ்வி கூறியுள்ளார்.
அதேபோல், பிரியங்கா காந்தியும் தேர்தல் பிரசாரத்திற்கு வரவில்லை என்றும் காங்கிரசின் மெத்தனத்தால்தான் பீகாரில் தங்கள் கூட்டணி தோல்வி அடைந்ததாகவும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் குற்றஞ்சாட்டியுள்ளது.
இதற்கிடையே, "மீண்டும் பீகார் முதல்வராகும் நிதிஷ்குமாரால் சுதந் திரமாகச் செயல்பட வாய்ப்பில்லை. பாஜகவே தனது கைப்பாவையாக நிதீஷ்குமாரை பின்னால் இருந்து ஆட்டிப் படைக்கும்," என்று காங்கிரஸ் மூத்த தலைவர் தாரிக் அன்வர் விமர்சித்துள்ளார்.

