மகாராஷ்டிர மாநிலம், புனேயில் வசிக்கும் ரேகா செலுகார் என்ற பெண், தீபாவளித் திருநாளை முன்னிட்டு தனது வீட்டைச் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, வீட்டில் இருந்த தேவையற்ற பொருட்களை எல்லாம் குப்பைத் தொட்டியில் எறிந்தவர், தனது நகைகளைப் பத்திரப்படுத்தி வைத்திருக்கும் கைப்பையையும் குப்பையோடு குப்பையாக எறிந்துள்ளார்.
தீபாவளியின்போது, நகைகளை அணிந்துகொள்ள நினைத்தபோதுதான், ரேகா செலுகாருக்குத் தான் செய்த இந்தத் தவறு நினைவுக்கு வந்தது. இதன்பின்னர் அவர் புனே மாநகராட்சி அதிகாரிகளைத் தொடர்புகொண்டு, ரூ.3 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்கம், வெள்ளி நகைகளை வைத்திருந்த கைப் பையை மறதியாக குப்பை லாரியில் போட்டுவிட்டது பற்றி கூற, அதி காரிகள் அப்பகுதிக்கு வந்து சென்ற லாரி எந்த குப்பைக் கிடங்குக்குச் சென்றிருக்கும் என்பதைக் கணித்து அங்கு சென்று தேடினர். நீண்ட நேர தேடலுக்குப் பின் அந்த கைப்பையும் அதிலிருந்த நகைகளும் பத்திரமாக மீட்கப்பட்டன. இதையடுத்து, ரேகா அதிகாரி களுக்கு மனதார நன்றி சொன்னார்.

