ஏடிஎம்-இல் நிரப்ப வேண்டிய பணத்துடன் ஓடிய ஓட்டுநர் சிக்கினார்

ஏடிஎம்-இல் நிரப்ப வேண்டிய பணத்துடன் ஓடிய ஓட்டுநர் சிக்கினார்

1 mins read
1b065253-dcf0-4658-a7f5-b8cc4adc281e
படம்: தமிழக ஊடகம் -

ஏடி­எம் இயந்­தி­ரத்­தில் நிரப்­பப்­பட வேண்­டிய பணத்­து­டன் வாக­னத்தை ஓட்­டிச் சென்ற ஓட்­டு­நர் கைது­ செய்­யப்­பட்­டார்.

மகா­ரா­‌ஷ்­டிர மாநி­லத்­தின் பால்­கர் மாவட்­டம் விரார், பொலிஜ் பகுதி­யில் இச் சம்­ப­வம் நடந்­தது.

தனி­யார் வங்கி ஏ.டி.எம். இயந்­தி­ரத்­தில் பணம் நிரப்ப தனி­யார் நிறு­வன ஊழி­யர்­கள் கடந்த வியா­ழக்­கி­ழமை இரவு சென்­ற­னர். இதில் ஊழி­யர்­கள் மற்­றும் காவ­லாளி ஏடி­எம் இயந்­தி­ரத்­தில் பணம் நிரப்­பச் சென்­ற­போது, வாக­னத்­தில் இருந்த ரூ.4¼ கோடி பணத்­து­டன் வாகன ஓட்­டு­நர் தப்பி ஓடி­னார்.

இதில் போலி­சார் கல்­யாண் பாட்டா பகு­தி­யில் நிறுத்­தப்­பட்டு இருந்த பணத்­து­டன் கடத்­திச் செல்­லப்­பட்ட வாகனத்தை மீட்­ட­னர். மேலும் அதிலிருந்து ரூ.2 கோடியே 30 லட்­சம் மீட்­கப்­பட்­டது. இதை­யடுத்து தப்­பி­ ஓடிய வாகன ஓட்­டு­நர் ரோகித் பாபன் அரு (வயது26) மற்­றும் அவ­ரது கூட்­டா­ளி­கள் இரண்டு பேரை­யும் அகமது நகரில் கைது செய்து அவர்­க­ளி­டம் இருந்த பணத்­தை­யும் போலி­சார் மீட்­ட­னர்.