ஏடிஎம் இயந்திரத்தில் நிரப்பப்பட வேண்டிய பணத்துடன் வாகனத்தை ஓட்டிச் சென்ற ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.
மகாராஷ்டிர மாநிலத்தின் பால்கர் மாவட்டம் விரார், பொலிஜ் பகுதியில் இச் சம்பவம் நடந்தது.
தனியார் வங்கி ஏ.டி.எம். இயந்திரத்தில் பணம் நிரப்ப தனியார் நிறுவன ஊழியர்கள் கடந்த வியாழக்கிழமை இரவு சென்றனர். இதில் ஊழியர்கள் மற்றும் காவலாளி ஏடிஎம் இயந்திரத்தில் பணம் நிரப்பச் சென்றபோது, வாகனத்தில் இருந்த ரூ.4¼ கோடி பணத்துடன் வாகன ஓட்டுநர் தப்பி ஓடினார்.
இதில் போலிசார் கல்யாண் பாட்டா பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்த பணத்துடன் கடத்திச் செல்லப்பட்ட வாகனத்தை மீட்டனர். மேலும் அதிலிருந்து ரூ.2 கோடியே 30 லட்சம் மீட்கப்பட்டது. இதையடுத்து தப்பி ஓடிய வாகன ஓட்டுநர் ரோகித் பாபன் அரு (வயது26) மற்றும் அவரது கூட்டாளிகள் இரண்டு பேரையும் அகமது நகரில் கைது செய்து அவர்களிடம் இருந்த பணத்தையும் போலிசார் மீட்டனர்.

