இந்திய-மியன்மார் எல்லை வழியாக தங்கம் கடத்தப்படுவதாகக் கிடைத்த ரகசிய தகவலையடுத்து, வருவாய்ப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அவ்வழியாக வந்த இரண்டு சரக்குந்துகளைச் சோதித்த போது அவற்றில் தங்கக் கட்டிகள் மறைத்து வைக்கப் பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தலா 166 கிராம் எடை கொண்ட 400 தங்கக் கட்டிகளை, அதாவது 66.4 கிலோ தங்கத்தை அதிகாரிகள் கைப்பற்றினர்.
அவற்றின் மொத்த மதிப்பு ரூ.35 கோடி எனக் கூறப்பட்டது.
இதன் தொடர்பில் ஐவர் கைது செய்யப்பட்டு, விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.