இந்தியாவில் கொவிட்-19 தொற்று 9 மில்லியனைக் கடந்தது

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 45,882 பேரை கொவிட்-19 கிருமி தொற்ற, மொத்த பாதிப்பு 9,004,365ஆக அதிகரித்தது.

கொரோனா தொற்றால் மேலும் 584 பேர் மரணமடைய, உயிரிழந்தோர் எண்ணிக்கை 132,162ஆனது.

தொற்றில் இருந்து மீண்டோர் விகிதம் 93.6 விழுக்காடாக உயர்ந்தது.

ஆயினும், 46 நாள்களுக்குப் பிறகு கிருமித்தொற்றில் இருந்து தேறியோர் எண்ணிக்கையைக் காட்டிலும் புதிதாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகமாகப் பதிவாகியுள்ளது.

மகாராஷ்டிரா 1,763,055 பேருடன் ஆக அதிகமாகப் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா ஆகியவை பட்டியலின் அடுத்த இடங்களில் இருக்கின்றன.

இதனிடையே, வீட்டைவிட்டு வெளியில் செல்லும்போது முகக்கவசம் அணிந்திராவிடில் 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். முன்னர் அபராதத் தொகை 500 ரூபாயாக இருந்தது.

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,546 பேரை கொரோனா தொற்றியது; 98 பேர் மரணமடைந்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!