மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள தேவாஸ் நகரில் இளைஞர்கள் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பதாக புகார் வந்ததையடுத்து போலிசார் விரைந்து சென்று இரு இளையர்களைப் பிடித்து கைது செய்தனர். வீதியில் நடக்கவிட்டு அழைத்துச் சென்றபோது அவர்களை தோப்புக்கரணம் போடச்சொன்னார்கள்.
இருவரும் வீதியில் தோப்புக்
கரணங்களைப் போட்டவாறு நடந்து சென்றனர். அதே நேரம் அவர்களின் பின்புறத்தில் ஆண், பெண் போலிசார் தடியால் அடித்தவாறே இரு இளையர்களை போலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இதனை சுற்றுவட்டாரத்தில் இருந்த மக்கள் வியப்புடன் பார்த்தனர். இச்சம்பவத்தை சிலர் காணொளியாக எடுத்து சமூக ஊடகங்களில் பதிவேற்றிவிட்டனர்.
‘சரியான தண்டனை’ என போலிசாரின் செயலுக்கு பெண்கள் ஆதரவளித்தபோதிலும் வீதியில் இளையர்களை அவமானப்படுத்தியதாக சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்தனர்.