வங்கிகள் தொடங்க தனியார் நிறுவனங்கள், வணிக நிறுவனங்களுக்கு அனுமதி அளித்தால் அவை சிறு பங்கை முதலீடு செய்துவிட்டு நாட்டின் நிதியைக் கட்டுப்படுத்தும் அளவுக்குச் சென்றுவிடும் என்று இந்தியாவின் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், வங்கிகள் தொடங்கும் உரிமத்தை யார் பெறுவார்கள் என்பது அனைவரும் அறிந்த ரகசியம். அரசியல் தொடர்புடைய பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத்தான் உரிமம் கிடைக்கும். இவை, வங்கிகளைக் கைக்குள் போட்டுக்கொள்ளும் சதித்திட்டம்.
வணிக நிறுவனங்களின் பிடியில் இருந்து வங்கிகள் மீட்கப்பட்டு 50 ஆண்டுகள் ஆகின்றன.
இந்த ஐம்பது ஆண்டுகளில் பெறப்பட்ட எண்ணற்ற நன்மைகளை, இந்த யோசனை சீர்குலைத்துவிடும். எனவே, மத்திய அரசின் இந்த யோசனையை அனைவரும் எதிர்க்க வேண்டும்,” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வங்கிகள் ஒழுங்குமுறை சட்டத்தில் உரிய திருத்தங்களைச் செய்த பிறகு பெருநிறுவனங்களும், தொழில் நிறுவனங்களும் வங்கிகள் தொடங்க அனுமதிக்கலாம் என நிபுணர் குழு பரிந்துரைத்தது. அதனையடுத்து திரு ப.சிதம்பரம் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார். ப.சிதம்பரத்தின் இந்த பேச்சு சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.