பாலியல் தொழிலாளர்களுக்கு உதவித்தொகை அறிவித்த மகாராஷ்டிரா

மகாராஷ்டிராவில் பாலியல் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு அம்மாநில அரசு உதவித்தொகை அறிவித்துள்ளது.

கொரோனா தொற்றுப் பரவலால் மும்பையில் பாலியல் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டதாகவும், அவர்களுக்கும் அரசு உதவி செய்ய வேண்டுமென்ற கோரிக்கை வலுத்த நிலையில் மகாராஷ்டிர அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இது குறித்து அறிவிப்பு வெளியிட்ட அம்மாநில அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் யசோமதி தாக்கூர், “மகாராஷ்டிராவில் பாலியல் தொழிலாளர்களுக்கு அக்டோபர் முதல் டிசம்பர் வரை மாதம் ரூ.5,000 உதவித்தொகை வழங்கப்படும். மகாராஷ்டிர மாநில அரசு இந்த திட்டத்துக்காக ரூ.50 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் இருந்தால் அவர்களுக்கும் கூடுதலாக ரூ.2500 வழங்கப்படும்,” என்று தெரிவித்தார்.

“மாநில அரசு அறிவித்த ஊரடங்குக்கு பாலியல் தொழிலாளர்களும் ஒத்துழைப்பு வழங்கினர். இந்தத் திட்டத்தால் 31,000 பேர் பயனடைவார்கள் என கணக்கிடப்பட்டுள்ளது,” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!