சவூதி அரேபியாவில் இந்திய ஆடவர் ஒருவரைப் பாகிஸ்தானியர் ஒருவர் கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மாண்டவர் கேரளாவின் மலப்புரத்தைச் சேர்ந்த அப்துல் அஸீஸ்.
அவர் ஜெத்தாவில் உள்ள மருந்து நிறுவனமொன்றில் பராமரிப்பு மேற்பார்வையாளராக வேலை செய்து வந்தார்.
தனிப்பட்ட பகையே அஸீஸின் கொலைக்குக் காரணம் எனக் கூறப்பட்டது.
அப்துல் அஸீஸைக் காப்பாற்ற முயன்ற இன்னொரு கேரள ஆடவரும் பங்ளாதேஷ் ஆடவர் ஒருவரும் காயமடைந்தனர்.