பிரியாணியால் சண்டை: நாத்தனார் அடித்ததில் பெண் உயிரிழப்பு

கோல்கத்தாவின் டால்ஹவுஸ் பகுதியில் கட்டடக்கலை நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் 40 வயது மாது, தம்முடைய நாத்தனார் தம் மகனுக்கு கெட்டுப் போன பிரியாணியக் கொடுத்ததாக எண்ணி ஆத்திரமடைந்தார். கெட்டுப்போன பிரியாணியைச் சாப்பிட்டதால்தான் தம்முடைய மகன் வாந்தி எடுத்ததாக அவர் நம்பினார்.

அவருடைய நாத்தனாரான 48 வயதான ஃபல்குனி பாசு எனும் பெண்ணை சரமாரியாக அந்தப் பெண் தாக்கியதில் ஃபல்குனி பாசு மயக்கமடைந்தார்.

அவசர சிகிச்சை வாகனத்தில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது, மருத்துவமனைக்கு வருவதற்கு முன்பே அவர் உயிரிழந்து விட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

சரமாரியாக அடித்ததில் அந்தப் பெண்ணுக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

தாக்கிய பெண்ணை போலிசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!