பேச்சுவார்த்தை தோல்வி: விவசாயிகள் போராட்டம் நீடிப்பு

பேச்சுவார்த்தை தோல்வி: விவசாயிகள் போராட்டம் நீடிப்பு

2 mins read
76541ec8-44a4-4acc-ad5c-2975a00c1ea7
உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள். படம்: ஊடகம் -

மத்­திய அர­சுக்­கும் விவ­சாய அமைப்­பு­க­ளுக்­கும் இடை­யே­யான இரண்­டாம் கட்­டப் பேச்­சு­வார்த்தை தோல்வி அடைந்­தது. இதை­ய­டுத்து இரு­த­ரப்­பும் இன்று மீண்­டும் பேச்­சு­வார்த்தை நடத்த உள்­ளன.

இதற்­கி­டையே வேளாண் சட்­டங்­களில் 8 திருத்­தங்­களை மேற்­கொள்ள மத்­திய அரசு முன்­வந்­துள்­ளது. ஆனால், விவ­சா­யி­கள் இந்­ந­ட­வ­டிக்­கை­யை­யும் ஏற்க மறுத்து விட்­ட­னர்.

மத்­திய அரசு அண்­மை­யில் கொண்­டு­வந்த மூன்று வேளாண் சட்­டங்­க­ளுக்கு விவ­சா­யி­கள் மத்­தி­யில் கடும் எதிர்ப்­புக் கிளம்­பி­யுள்­ளது. மூன்று சட்­டங்­க­ளை­யும் அரசு திரும்­பப் பெற­வேண்­டும் என வலி­யு­றுத்தி விவ­சாய அமைப்­பு­கள் டெல்­லி­யில் தொடர் போராட்­டத்­தில் ஈடு­பட்­டுள்­ளன.

ஹரி­யானா, பஞ்­சாப், உத்­த­ரப்­பி­ர­தே­சம் உள்­ளிட்ட மாநி­லங்­களில் இருந்து ஆயி­ரக்­க­ணக்­கா­னோர் டெல்­லி­யில் ஒன்று திரண்டு போராட்­டத்தை நடத்தி வரு­கின்­ற­னர். இதை­ய­டுத்து 40 விவ­சாய சங்­கங்­கள் மற்­றும் அமைப்­பு­க­ளின் பிர­தி­நி­தி­க­ளு­டன் மத்­திய அரசு கடந்த செவ்­வாய் மற்­றும் வியா­ழக்­கி­மை­களில் பேச்­சு­வார்த்தை நடத்­தி­யது.

ஆனால், இரு­மு­றை­யும் சுமூ­க­மான தீர்வு காணப்­ப­ட­வில்லை. நேற்று முன்­தி­னம் நடந்த பேச்­சு­வார்த்தை எட்டு மணி நேரம் நீண்­டது. கூட்­டத்­துக்­குப் பின்­னர் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய மத்­திய வேளாண் அமைச்­சர் நரேந்­தர் சிங் தோமர், விவ­சா­யி­கள் விவ­கா­ரத்­தில் மத்­திய அரசு பிடி­வா­தத்­து­டன் நடந்­து­கொள்­ள­வில்லை என்­றார்.

புதிய வேளாண் சட்­டங்­கள் தொடர்­பாக விவ­சா­யி­கள் எழுப்­பி­யுள்ள அனைத்­துப் பிரச்­சி­னை­க­ளை­யும் திறந்த மன­து­டன் பரிசீலிக்­க­வும் விவா­திக்­க­வும் மத்­திய அரசு தயா­ராக உள்­ளது என்­றும் அவர் தெரி­வித்­தார்.

ஆனால், புதிய வேளாண் சட்­டங்­களை மத்­திய அரசு திரும்­பப் பெறும் வகை­யில் நாடா­ளு­மன்ற சிறப்­புக் கூட்­டத்­தைக் கூட்­ட­வேண்­டும் என விவ­சா­யி­கள் தரப்­பில் வலி­யு­றுத்­தப்­ப­டு­கிறது.

இதற்­கி­டையே அமைச்­சர்­க­ளு­ட­னான பேச்­சு­வார்த்­தை­யில் பங்­கேற்ற விவ­சாய சங்­கப் பிர­தி­நி­தி­க­ளுக்கு மத்­திய அர­சின் சார்­பில் மத்­திய உணவு கொண்டு வரப்­பட்­டது. ஆனால், அந்த உண­வைப் பெற்­றுக்­கொள்ள அப்­பி­ர­தி­நி­தி­கள் மறுத்­து­விட்­ட­னர்.

தங்­க­ளுக்கு உண­வ­ளித்து உப­ச­ரிப்­ப­தற்­குப் பதி­லாக தங்­க­ளு­டைய பிரச்­சி­னை­க­ளுக்­குத் தீர்வு காண்­ப­தில் அரசு கவ­னம் செலுத்த வேண்­டும் என அவர்­கள் வலி­யு­றுத்­தி­னர்.

டெல்­லி­யில் நில­வும் கடும் குளிரை மன­திற்­கொண்டு விவ­சா­யி­கள் தங்­க­ளு­டைய போராட்­டத்தை முடித்­துக்­கொள்ள வேண்­டும் என மத்­திய அரசு கேட்­டுக் கொண்­டுள்­ளது.

"இவ்விஷயத்தில் யார் பெரியவர், யார் சிறியவர் என்ற பேச்சுக்கே இடமில்லை. மூன்று வேளாண் சட்டங்களிலும் விவசாயிகள் முன்வைக்கும் திருத்தங்களைப் பரிசீலிக்க மத்திய அரசு தயாராக இருக்கிறது," என்று மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறாவிட்டால் நாடு தழுவிய அளவில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரித்துள்ளார். இதுதொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் வாழ்க்கை நிலை தமக்குப் பெரும் கவலை அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.