இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனைக்காக தடுப்பூசி போட்டுக் கொண்ட அம்மாநில உள்துறை அமைச்சர் அனில் விஜ், 67, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அம்பாலாவில் உள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் பரிசோதனைக்காக தடுப்பூசி போட்டுக்கொண்ட இரண்டு வாரங்களுக்கு மேல் ஆகியுள்ள நிலையில் அவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
பாரத் பயோடெக் நிறுவனத்தின் ‘கோவேக்ஸ்’ தடுப்பு மருந்தின் மூன்றாம் கட்டப் பரிசோதனைக்காக நவம்பர் 20ஆம் தேதி அவருக்கு முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டது. அந்தத் தடுப்பூசி போட்டுக்கொண்ட மாநிலத்தின் முதல் நபர் தாம் என முன்பு அவர் டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.
அந்த தடுப்பு மருந்தின் இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டு குறிப்பிட்ட சில நாட்களுக்குப் பிறகே உடலில் நோயெதிர்ப்புக்கான ஆன்டிபாடிகள் உருவாகும் எனக் கூறப்பட்டுள்ள நிலையில், அமைச்சர் இன்னும் இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மருத்துவ பரிசோதனையில் கோவிக்ஸின் முதல் இரண்டு கட்டங்களில் சுமார் 1000 பேருக்கு சோதனைக்கு உட்பட்டுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.