மூன்றாம் கட்ட பரிசோதனையில் பங்கேற்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட அமைச்சருக்கு கொவிட்-19

இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனைக்காக தடுப்பூசி போட்டுக் கொண்ட அம்மாநில உள்துறை அமைச்சர் அனில் விஜ், 67, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அம்பாலாவில் உள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் பரிசோதனைக்காக தடுப்பூசி போட்டுக்கொண்ட இரண்டு வாரங்களுக்கு மேல் ஆகியுள்ள நிலையில் அவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

பாரத் பயோடெக் நிறுவனத்தின் ‘கோவேக்ஸ்’ தடுப்பு மருந்தின் மூன்றாம் கட்டப் பரிசோதனைக்காக நவம்பர் 20ஆம் தேதி அவருக்கு முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டது. அந்தத் தடுப்பூசி போட்டுக்கொண்ட மாநிலத்தின் முதல் நபர் தாம் என முன்பு அவர் டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

அந்த தடுப்பு மருந்தின் இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டு குறிப்பிட்ட சில நாட்களுக்குப் பிறகே உடலில் நோயெதிர்ப்புக்கான ஆன்டிபாடிகள் உருவாகும் எனக் கூறப்பட்டுள்ள நிலையில், அமைச்சர் இன்னும் இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மருத்துவ பரிசோதனையில் கோவிக்ஸின் முதல் இரண்டு கட்டங்களில் சுமார் 1000 பேருக்கு சோதனைக்கு உட்பட்டுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!