ஓடுபாதையில் தவறு: இரண்டு விமானிகளுக்கு கட்டாய ஓய்வு

ஓடுபாதையில் தவறு: இரண்டு விமானிகளுக்கு கட்டாய ஓய்வு

1 mins read

கவுகாத்தி: ஓடு­பா­தை­யில் விமா­னத்­தைத் தரை இறக்­கி­ய­போது கவ­னக்­கு­றை­வா­கச் செயல்­பட்ட இரு விமா­னி­க­ளுக்­குக் கட்­டாய ஓய்வு அளிக்­கப்­பட்­டுள்­ளது.

நேற்று முன்­தி­னம் தனி­யார் விமா­னம் ஒன்று பெங்­க­ளூ­ரு­வில் இருந்து அசாம் மாநி­லத்­தில் உள்ள கவு­காத்தி அனைத்­து­லக விமான நிலை­யத்தை வந்­த­டைந்­தது.

முன்­ன­தாக அந்த விமா­னம் ஓடு­பா­தை­யில் தரை­யி­றங்­கு­வ­தற்­கான குறிப்­பு­கள் அளிக்­கப்­பட்­டன. ஆனால், தரை­யி­றங்க வேண்­டிய இடத்­துக்கு முன்­பா­கவே அந்த விமா­னம் திடீ­ரென தரை இறங்­கி­ய­தால் பர­ப­ரப்பு ஏற்­பட்­டது. விதி­மு­றையை மீறி முன்­கூட்­டியே தரை­யி­றங்­கி­ய­தால் ஓடு­பா­தை­யின் துவக்­கத்­தில் உள்ள சில மின் விளக்­கு­கள் சேத­ம­டைந்­தன. எனி­னும் பய­ணி­கள் யாருக்­கும் எந்­த­வி­தக் காயங்­களும் ஏற்­ப­ட­வில்லை என அத்­த­னி­யார் விமான நிறு­வ­னம் தெரி­வித்­துள்­ளது.

எனினும் விமானிகளுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டது.