4 தடுப்பூசி மருந்துகள் மீது இந்தியா நம்பிக்கை

4 தடுப்பூசி மருந்துகள் மீது இந்தியா நம்பிக்கை

2 mins read
f6e20e6a-9511-4190-8d01-88aa9851e18c
-

இந்­தியா அடுத்த ஆண்டு ஜூலை மாதத்­திற்­குள் சுமார் 300 மில்­லி­யன் பேருக்கு கொவிட்-19 கிரு­மித்­தொற்­றுக்கு எதி­ரான தடுப்­பூசி போடு­வதை உறு­தி­செய்ய, நான்கு தடுப்­பூசி மருந்­து­க­ளைக் குறி­வைத்­துள்­ளது.

இதன்­படி ஆக்ஸ்­ஃபோர்டு-எஸ்ட்­ர­ஸெ­னி­கா­வின் 'கோவி­ஷீல்டு', பரத் பயோ­டெக்­கின் 'கோவெக்­சின்' ஆகிய இரண்டு தடுப்­பூசி மருந்­து­கள் அடுத்த ஜன­வரிக்­குள் கிடைத்­து­வி­டும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

ஏப்­ரல் இறு­திக்­குள் அமெ­ரிக்­கா­வின் ஃபைசர் மருந்­தும் ரஷ்­யா­வின் 'ஸ்பட்­னிக் வி'யும் கிட்­டும் என்­றும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

குறைந்­தது நால்­வகை தடுப்­பூசி மருந்­து­கள் இந்­தி­யா­வில் கிடைக்­கும் நிலை­யில், மக்­க­ளுக்கு முன்­னு­ரிமை அடிப்­ப­டை­யில் ஜூன், ஜூலை மாதங்­க­ளுக்­குள் தடுப்­பூசி போடப்­படும் என்று நம்­பப்­ப­டு­கிறது.

ஏற்­கெ­னவே ஃபைசர் நிறு­வ­னம், அதன் கொவிட்-19 தடுப்­பூசி மருந்தை அவ­ச­ர­கால மருந்­தாக பயன்­ப­டுத்த பிரிட்­டன், பஹ்­ரேன் உள்­ளிட்ட பல நாடு­க­ளி­ட­மி­ருந்து அனு­மதி பெற்­று­விட்­டது.

இதை­ய­டுத்து, தன் தடுப்­பூசி மருந்தை இந்­தி­யா­வி­லும் அவ­ச­ர­கால மருந்­தா­கப் பயன்­ப­டுத்த அனு­ம­திக்­கும்­படி புது­டெல்­லிக்­குக் கோரிக்கை விடுத்­துள்­ளது.

பிரிட்­ட­னின் ஆக்ஸ்­போர்டு பல்­கலைக்­க­ழ­க­மும் ஸ்வீ­ட­னின் எஸ்ட்­ர­ஸெ­னிகா நிறு­வ­ன­மும் இணைந்து கொரோனா தடுப்­பூ­சியை உரு­வாக்­கி­யுள்­ளன.

இந்­தத் தடுப்­பூசி 90 விழுக்­காடு செயல்­தி­றன் கொண்­ட­தாக தெரி­ய­வந்­துள்­ளது.

இந்த தடுப்­பூ­சியை இந்­தி­யா­வில் உற்­பத்தி செய்­யும் உரி­மத்தை புனே­வைத் தலை­மை­ய­க­மா­கக் கொண்­டுள்ள 'சீரம் இன்ஸ்­டி­டி­யூட் ஆப் இந்­தியா' பெற்று, கோவி­ஷீல்டு என்ற பெய­ரில் தடுப்­பூ­சி­யைத் தயாரித்­துள்­ளது.

இந்­தி­யா­வில் அவ­ச­ர­மா­கத் தேவைப்­படும் தடுப்­பூ­சியை அறி­மு­கப்­ப­டுத்­தும் முயற்­சி­யில் தீவி­ரம் காட்டி வரும் சீரம், கோவி­ஷீல்டு மருந்­தின் மூன்­றாம் கட்ட பரி­சோ­தனை­யைப் பல்­வேறு பகு­தி­களில் மேற்­கொண்­டுள்­ளது.

அமெ­ரிக்­கா­வின் ஃபைசர், மொடர்னா மருந்­து­க­ளைச் சார்ந்து இருப்­ப­தற்­குப் பதி­லாக இந்­தி­யா­வி­லேயே உரு­வாக்­கப்­படும் மருந்­தையே பயன்­ப­டுத்­த­லாம் என்று தாங்­கள் நம்­பு­வ­தாக இந்­திய அதி­கா­ரி­கள் தெரி­வித்து உள்­ள­னர்.

இந்­நி­லை­யில் இந்­தி­யா­வின் மொத்த கிரு­மித்­தொற்று எண்­ணிக்கை, 9.67 மில்­லி­ய­னைத் தாண்டி­விட்­டது.

குறிப்புச் சொற்கள்