ராஜஸ்தானில் ஜோத்பூர் நகரில் பிஜேஎஸ் என்ற பகுதியில் வசித்து வந்த விக்ரம் சிங், 35, என்பவருக்கு வேலை போய்விட்டதால் வீட்டில் மனைவிக்கும் அவருக்கும் இடையில் எப்போதுமே பிரச்சினை இருந்து வந்தது.
இதனால் எரிச்சல் அடைந்த விக்ரம் சிங், ஒரு நாள் வீட்டில் இருந்த கத்தரிக்கோலை எடுத்து ஷிவ் கன்வார், 30, என்ற தன் மனைவியைக் பல முறை குத்தினார்.
அந்தப் பெண்மணி தரையில் ரத்த வெள்ளத்தில் துடித்தார். ஆனால் அதைப் பெரிதாகக் கருதாமல் போலிசுக்கும் உறவினர்களுக்கும் நிதானமாக தகவல் தெரிவித்துவிட்டு பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு தன் கைபேசியை எடுத்து அதில் விக்ரம் சிங் விளையாடிக் கொண்டு இருந்தார்.
தகவல் அறிந்து விரைந்த போலிஸ் அந்தப் பெண்ணைக் காப்பாற்ற மேற்கொண்ட முயற்சிகள் வெற்றி பெறவில்லை. ஆடவர் கைதாகி விசாரிக்கப்பட்டு வருகிறார்.


