அப்போலோ: இந்தியாவில் அன்றாடம் 1 மி. பேருக்கு கொரோனா தடுப்பூசி போடத் தயார்

அப்போலோ: இந்தியாவில் அன்றாடம் 1 மி. பேருக்கு கொரோனா தடுப்பூசி போடத் தயார்

2 mins read
a08ab2ea-a874-45fd-bfe0-04473738c75f
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

ஒவ்­வொரு நாளும் ஒரு மில்­லி­யன் பேருக்கு கொவிட்-19 தடுப்­பூசி போடத் தயா­ராக இருப்­ப­தாக இந்­தி­யா­வின் ஆகப் பெரிய மருத்­து­வ­மனை குழுமமான அப்­போலா மருத்­து­வ­ம­னை­கள் என்­டர்­பி­ரைஸ் தெரி­வித்­துள்­ளது.

ஆனால் எத்­தனை தடுப்­பூ­சி­கள் விநி­யோ­கிக்­கப்­படும் என்­பது குறித்­தும் தடுப்­பூசி போடுவ­தில் தனி­யார் மருத்­து­வ­ம­னை­க­ளுக்கு அனு­மதி வழங்­கப்­ப­டுமா என்­பது குறித்­தும் இந்­திய அர­சாங்­கம் இன்­னும் தெளிவுப­டுத்­த­வில்லை என்று அது கூறி­யது. தனக்­குச் சொந்­த­மான 71 மருத்­து­வ­ம­னை­கள், நூற்­றுக்­க­ணக்­கான மருந்­த­கங்­கள், ஆயி­ரக்­க­ணக்­கான மருந்­துக்­க­டை­கள் ஆகி­ய­வற்­றில் உள்ள 6,000 ஊழி­யர்­க­ளுக்குத் தடுப்­பூசி போட பயிற்சி அளித்­து­விட்­ட­தாக அப்­போ­லோ­வின் நிர்­வாக இயக்­கு ­நர் சுனிதா ரெட்டி கூறி­னார்.

இந்­தி­யத் தலை­ந­கர் புது­டெல்­லி­யில் அர­சாங்க அதி­கா­ரி­க­ளு­டன் பேச்­சு­வார்த்தை நடத்தி வரு­வ­தா­க­வும் ஆனால் தடுப்­பூசி தொடர்­பான விவ­ரங்­கள் இன்­னும் உறுதி செய்­யப்­ப­ட­வில்லை என்­றும் அவர் தெரி­வித்­தார்.

"தடுப்­பூசி போடு­வதை அர­சாங்­கம் முழு­மை­யாக ஏற்று நடத்த விரும்­பு­கி­றதா அல்­லது தனி­யார் துறைக்கு அதில் அனு­மதி உள்­ளதா என்­பதை அறிந்­து­கொள்ள விரும்­பு­கி­றோம்.

"தடுப்­பூசி பெறக்­கூ­டி­ய­வர்க­ளின் எண்­ணிக்­கையை எவ்­வாறு இரட்­டிப்­பாக்­கு­வது என்­பதே முக்­கி­யம். அனைத்து வகை­யி­லும் உதவி செய்ய அப்­போலோ தயா­ராக இருக்­கிறது.

"தடுப்­பூசி போடும் பணியை அர­சாங்­கத்­தால் ஏற்று நடத்த முடி­யும். ஆனால் அதைச் செய்து முடிக்க நேரம் எடுக்­கும்," என்று சென்­னை­யி­லி­ருந்து திரு­வாட்டி ரெட்டி செய்­தி­யா­ளர்­க­ளி­டம் தெரி­வித்­தார்.

கொரோனா கிரு­மித்­தொற்­றால் அதி­கம் பாதிக்­கப்­பட்­டுள்ள நாடு­க­ளின் பட்­டி­ய­லில் இந்­தியா இரண்­டா­வது இடத்­தில் உள்­ளது.

தடுப்­பூசி போடுவது தொடர்­பில் பெரிய கட்­ட­மைப்பு கொண்ட தனி­யார் மருத்­து­வ­ம­னை­க­ளு­டன் இணைந்து செயல்­பட இந்­திய அர­சாங்­கம் முடி­வெ­டுத்­தால் குறு­கிய கால­கட்­டத்­தில் அதி­க­மா­னோ­ருக்­குத் தடுப்­பூசி கிடைக்­கும் வாய்ப்பு உள்­ள­தாக மருத்­துவ நிபு­ணர்­கள் கூறு­கின்­ற­னர்.

தடுப்­பூசி போடு­வதை அடுத்த சில வாரங்­களில் இந்­தியா தொடங்­கும் என்று நம்­பப்­ப­டு­கிறது. அது­மட்­டு­மல்­லாது, அடுத்த ஐந்­தி­லி­ருந்து ஆறு மாதங்­களில் இந்­தி­யா­வுக்­குப் பெரு­ம­ள­வி­லான தடுப்­பூசி மருந்து அனுப்­பி­வைக்­கப்­படும் என்று பாரத் பாயோ­டெக் இன்­டர்­நே­ஷ­னல் நிறு­வ­னத்­தின் தலை­வர் கிருஷ்ணா எல்லா தெரி­வித்­தார்.

இன்­னும் 60லிருந்து 120 நாட்க­ளுக்­குள் தடுப்­பூசி மருந்து கிடைத்­து­வி­டும் என்­றும் தனது சேவை­க­ளைப் பயன்­ப­டுத்­துவோருக்கு அது­கு­றித்து முத­லில் தக­வல் தெரி­விக்­கப்­படும் என்­றும் அதன் மின்­னி­லக்­கச் செயலி மூலம் அப்­போலா மருத்­து­வ­ம­னை­கள் என்­டர்­பி­ரைஸ் தெரி­வித்து வரு­கிறது.

கொவிட்-19 தடுப்­பூசி மருந்தை தயா­ரித்­துள்ள இந்­திய சீரம் கழ­கத்­து­டன் அப்­போலா மருத்­து­வ­மனை­கள் பேச்­சு­வார்த்தை நடத்­தி­யுள்­ளது. இருப்­பினும், மத்­திய அர­சின் வழி­காட்­டு­த­லுக்­குக் காத்­தி­ருப்­ப­தாக திரு­வாட்டி ரெட்டி கூறி­னார்.

குறிப்புச் சொற்கள்