போராட்டம் தீவிரமடையும்: விவசாயிகள் எச்சரிக்கை

போராட்டம் தீவிரமடையும்: விவசாயிகள் எச்சரிக்கை

2 mins read
d3c29bff-1de5-42d8-9829-9d28284d0d5b
வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு தேவையான உணவு உள்ளிட்ட பொருட்களை பொதுமக்கள் தாமே முன்வந்து விநியோகித்து வருகிறார்கள். அமிர்தசரசில் மூவர் பொருட்களை எடுத்துச் செல்கின்றனர். படம்: ஈபிஏ -

வேளாண் சட்­டங்­களை திரும்­பப் பெற வலி­யு­றுத்தி விவ­சா­யி­கள் நடத்தி வரும் போராட்­டம் 15 நாள்­க­ளாக நீடித்து வரும் நிலை­யில், போராட்­டத்­தில் பங்­கேற்­ப­வர்­க­ளின் எண்­ணிக்கை நாளுக்கு நாள் அதி­க­ரித்து வரு­கிறது.

பஞ்­சாப் மற்­றும் ஹரி­யா­னா­வில் இருந்து தின­மும் நூற்­றுக்­க­ணக்­கா­னோர் டெல்லி நோக்கி செல்­வ­தா­க­வும் இத­னால் போராட்­டக்­க­ளம் தீவி­ர­ம­டைந்து வரு­வ­தா­க­வும் ஊட­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

இதற்­கி­டையே மத்­திய அர­சின் கோரிக்­கை­களை ஏற்க மறுத்­துள்ள விவ­சாய அமைப்­பு­கள் திங்­கட்­கி­ழ­மை­யன்று நாடு தழு­விய அள­வில் போராட்­டம் நடை­பெ­றும் என எச்­ச­ரித்­துள்­ளன.

விவ­சா­யி­க­ளு­ட­னான ஆறாம் கட்­டப் பேச்­சு­வார்த்­தையை புதன்­கி­ழ­மை­யன்று மத்­திய அரசு திடீ­ரெ­னக் கைவிட்­டது. இத­னால் விவ­சா­யி­கள் தரப்பு கடும் அதி­ருப்தி அடைந்­துள்­ளது.

புதிய வேளாண் சட்­டங்­கள் குறித்து விவ­சா­யி­கள் கொண்­டுள்ள ஆட்­சே­ப­ணைகளை திறந்த மன­து­டன் பரி­சீ­லிக்­கத் தயா­ராக இருப்­ப­தாக மத்­திய அரசு கூறி­யது. அச்­சட்­டங்­களில் மாற்­றங்­க­ளைச் செய்ய முன்­வந்­த­து­டன் வரைவு முன்­மொ­ழி­வை­யும் வெளி­யிட்­டது.

ஆனால் விவ­சா­யி­கள் மூன்று சட்­டங்­க­ளை­யும் திரும்­பப் பெற வேண்­டும் என்­பதை மட்­டுமே வலி­யு­றுத்தி வரு­கின்­ற­னர்.

இந்­நி­லை­யில் திங்­கட்­கி­ழமை முதல் போராட்­டம் மேலும் தீவி­ர­ம­டை­யும் என்­றும் நாடு தழு­விய அள­வில் இதற்கு ஆத­ரவு கோரப்­படும் என்­றும் விவ­சாய அமைப்­பு­க­ளின் பிர­தி­நி­தி­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

விவ­சா­யி­க­ளின் தொடர்ச்­சி­யான போராட்­டங்­க­ளுக்குப் பின்­னால் சீனா, மற்­றும் பாகிஸ்­தான் இருப்­ப­தாக மத்­திய அமைச்­ச­ரும் பாஜக தலை­வ­ரு­மான ரோசா­ஹேப் தான்வே கூறி­யுள்­ளார்.

குடி­யு­ரிமை திருத்த சட்­டம், தேசிய குடி­மக்­கள் பதிவு ஆகி­யவை தொடர்­பாக இஸ்­லா­மி­யர்­கள் எப்­படி தவ­றாக வழி­ந­டத்­தப்­பட்­ட­னரோ அதேபோல் விவ­சா­யி­கள் புதிய வேளாண் சட்­டங்­கள் மூலம் இழப்­பு­களைச் சந்­திக்க நேரி­டும் என்று வதந்தி பரப்­பப்­ப­டு­கிறது என அவர் சாடி­யுள்­ளார்.