தீவிரமடையும் போராட்டம்

2 mins read
e5ecb955-0e13-4684-a192-363d3657936d
வேளாண் சட்டங்களை எதிர்த்து புதுடெல்லி எல்லைகளில் விவசாயிகள் தொடர்ந்து போராடு கிறார்கள். சிங்கு என்ற எல்லைப் பகுதி பல நாட்களாக இப்படி அடைபட்டு உள்ளது. படம்: இந்திய ஊடகம் -

கௌரவம் பார்க்காமல் பேச்சுவார்த்தைக்கு வரும்படி அரசு விடுத்த அழைப்பு நிராகரிப்பு

புது­டெல்லி: மத்­திய அர­சின் வேளாண் சட்­டங்­களைத் திரும்­பப் பெற வலி­யு­றுத்தி விவ­சாயி­கள் நடத்தி வரும் போராட்­டம் நேற்று 17வது நாளாக நீடித்­தது.

இந்த நிலை­யில், மேலும் ஏரா­ள­மான வாக­னங்­களில் விவ­சா­யி­கள் புது­டெல்லி எல்­லையை நோக்கி பஞ்­சாப்­பில் இருந்து புறப்­பட்­ட­தாக தக­வல்­கள் தெரி­வித்­தன.

புது­டெல்லிக்கு வரும் முக்­கி­ய­மான ரயில்­களை நிறுத்தி போரா­டப் போவ­தா­க­வும் விவசாயிகள் கடுமை யாக எச்­சரித்து இருக்­கி­றார்­கள்.

சுமார் 40 விவ­சாய அமைப்­பு­களைச் சேர்ந்த பல்­லா­யி­ரக்­க­ணக்­கான விவ­சா­யி­கள் டெல்­லி­யில் குழுமி உள்­ள­னர். இந்­தப் போராட்­டம் கார­ண­மாக புது­டெல்­லி­யில் இருந்து பல மாநி­லங்­க­ளுக்­குச் செல்­லும் சாலை­கள் அடை­பட்­டு­விட்­ட­தால் போக்­கு­வ­ரத்து நெரி­சலால் புது­டெல்லி திண­று­கிறது.

அர­சு­டன் பலமுறை பேச்­சு­வார்த்தை நடத்­தி­யும் பிரச்­சி­னைக்­குத் தீர்வு இல்லை.

இந்த நிலை­யில், கௌர­வம் பார்க்­கா­மல் பேச்­சு­வார்த்­தைக்கு வரும்படி விவ­சா­யி­க­ளுக்கு மத்­திய அரசு அழைப்பு விடுத்­தது. ஆனால் அதற்கு விவ­சா­யி­க­ளி­டம் இருந்து பதில் இல்லை என நேற்று பிற்பக லில் இந்­திய அரசு தெரி­வித்­தது.

அர­சாங்­கத்­திற்­கும் விவ­சா­யி­களுக்­கும் இடை­யில் நடந்த பேச்சு­வார்த்­தை­யில் வேளாண் சட்­டங்­களைத் திருத்­து­வ­தற்கு அர­சாங்­கம் முன்­வந்­தது. ஆனால் அந்­தத் திருத்­தங்­கள் விவ­சா­யி­க­ளுக்­குத் தேவை­யில்லை என்று நேற்று விவ­சா­யி­கள் சங்­கத் தலை­வர் பல்­தேவ் சிங் திட்­ட­வட்­ட­மா­கத் தெரி­வித்­தார்.

"பெரும் நிறுவனங்களுக்கு ஆதரவான மூன்று சட்­டங்­களையும் மத்­திய அர­சாங்­கம் திரும்­பப் பெற­வேண்­டும். இல்லை என்­றால் டிசம்­பர் 12 ஆம் தேதி (இன்று) டெல்லி-ஜெய்­ப்பூர் நெடுஞ்­சாலை ஆக்­கி­ர­மிக்­கப்­படும்," என்று அவர் தெரி­வித்­த­தாக இந்திய ஊட­கங்­கள் குறிப்­பிட்­டன.

புதுடெல்லியை முற்றுகையிடும் நோக்கத்துடன் நவம்பர் 26ஆம் தேதி முதல் விவசாயிகள் போராட் டம் நடந்து வருகிறது.

குறிப்புச் சொற்கள்