புதுடெல்லி: இந்தியா-பங்ளாதேஷ் ரயில்பாதை மீண்டும் 55 ஆண்டு களுக்குப் பிறகு திறக்கப்பட உள்ளதாக வடகிழக்கு எல்லை ரயில்வே தெரிவித்துள்ளது.
இதை டிசம்பர் 17ஆம் தேதி பிரதமர் மோடியும் பங்ளாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவும் திறந்துவைப்பார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த 1965ஆம் ஆண்டு போர் நடந்ததற்குப் பிறகு இந்தியா-கிழக்கு பாகிஸ்தான் இடையிலான ரயில் இணைப்புகள் முறிந்தன.
மேற்கு வங்காளத்தில் உள்ள கூச்பிஹார் மாவட்டத்தைச் சேர்ந்த ஹால்திபரி முதல் வடக்கு பங்ளாதேஷ் சிலாஹதி வரையிலான ரயில் பாதை செயலிழந்தது.
இந்தப் பாதை 55 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்படுகிறது. முதலில் சிலாஹதி யில் இருந்து ஹால்திபரி வரை ஒரு சரக்கு ரயில் இயக்கப்படும்.
ஹால்திபரி, வடகிழக்கு ரயில்வேயின் கதிஹார் கோட்டத்தில் உள்ள முக்கியமான ரயில் நிலையம் ஆகும்.