55 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-பங்ளாதேஷ் இடையே ரயில்

1 mins read
586cfb77-990e-4ca0-93e4-c93ca88bc3f3
இதை டிசம்­பர் 17ஆம் தேதி பிர­த­மர் மோடி­யும் பங்ளாதேஷ் பிர­த­மர் ஷேக் ஹசீ­னா­வும் திறந்து­வைப்­பார்­கள் என அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர். படம்: பிடிஐ -

புது­டெல்லி: இந்தியா-பங்­ளா­தேஷ் ரயில்­பாதை மீண்­டும் 55 ஆண்­டு­ க­ளுக்­குப் பிறகு திறக்­கப்­பட உள்­ள­தாக வட­கி­ழக்கு எல்லை ரயில்வே தெரி­வித்­துள்­ளது.

இதை டிசம்­பர் 17ஆம் தேதி பிர­த­மர் மோடி­யும் பங்ளாதேஷ் பிர­த­மர் ஷேக் ஹசீ­னா­வும் திறந்து­வைப்­பார்­கள் என அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

கடந்த 1965ஆம் ஆண்டு போர் நடந்­த­தற்­குப் பிறகு இந்­தி­யா-­கிழக்கு பாகிஸ்­தான் இடை­யி­லான ரயில் இணைப்­பு­கள் முறிந்­தன.

மேற்கு வங்­காளத்தில் உள்ள கூச்பிஹார் மாவட்­டத்­தைச் சேர்ந்த ஹால்­தி­பரி முதல் வடக்கு பங்­ளா­தேஷ் சிலா­ஹதி வரை­யி­லான ரயில் பாதை செய­லி­ழந்­தது.

இந்­தப் பாதை 55 ஆண்­டு­களுக்­குப் பிறகு மீண்­டும் திறக்­கப்­ப­டு­கிறது. முத­லில் சிலா­ஹதி யில் இருந்து ஹால்­தி­பரி வரை ஒரு சரக்கு ரயில் இயக்­கப்­படும்.

ஹால்­தி­பரி, வடகிழக்கு ரயில்­வே­யின் கதி­ஹார் கோட்­டத்­தில் உள்ள முக்­கி­ய­மான ரயில்­ நி­லை­யம் ஆகும்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்