இந்தியாவில் இப்போதைய நாடாளுமன்றத்துக்கு அருகே டாட்டா நிறுவனம் கட்டவிருக்கும் புதிய நாடாளுமன்றம் 150 ஆண்டுகளுக்குப் பிறகும் நீடிக்கும் என்றும் 150% அதிக உறுப்பினர்களுக்கு இடமளிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
நாடாளுமன்ற மக்களவையின் கருப்பொருள் மயிலாகவும் மேலவையின் கருப்பொருள் தாமரையாகவும் இருக்கும். அதிநவீன வசதிகளுடன் மின்னிலக்க ரீதியில் அந்த வளாகம் முக்கோண வடிவில் அரசமைப்புச் சட்ட அரங்கம் ஒன்றுடன் அமைக்கப்பட்டிருக்கும்.
மற்ற பகுதிகளில் நான்கு மாடிகள் அமைந்திருக்கும். ஒவ்வொரு மாடியிலும் ஏராளமான அலுவலகங்கள் இருக்கும்.
முதல் மாடியில் பிரம்மாண்ட உணவகம் ஒன்றும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, அழைப்பு விடுக்கப்பட்டும் அடிக்கல் நாட்டுவிழாவில் கலந்துகொள்ளாத எதிர்த்தரப்பினர், கொவிட்-19 கிருமி ஒழியவில்லை; விவசாயிகள் போராட்டம் தீரவில்லை; பொருளாதாரம் சரி யில்லா ஒரு நேரத்தில் புதிய மன்றத்துக்கு அடிக்கல் நாட்டுவிழா ஏன் என்று கேள்வி எழுப்பினர்.

