கொரோனா தடுப்பூசி போடுவதற்கு வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டது இந்திய அரசு

கொரோனா தடுப்பூசி போடுவதற்கு வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டது இந்திய அரசு

2 mins read
305abf9a-095d-432e-adf1-0f065beed0f5
மும்பையில் உள்ள ஒரு குடியிருப்பு பகுதியில் கொரோனா கிருமித்தொற்றை கண்டறிவதற்கான பரிசோதனையை மேற்கொள்ள தயாராகும் சுகாதார பணியாளர்கள்.படம்: ஊடகம் -

புது­டெல்லி: கொரோனா தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள முன்­கூட்­டியே பதிவு செய்­த­வர்­க­ளுக்கு மட்­டுமே முன்­னு­ரிமை அளிக்­கப்­படும் என மத்­திய அரசு தெரி­வித்­துள்­ளது.

தடுப்­பூசி போடு­வது தொடர்­பான வழி­காட்டி நெறி­மு­றை­க­ளை­யும் அரசு வெளி­யிட்­டுள்­ளது.

உல­கம் முழு­வ­தும் பல்­வேறு நாடு­களில் கொரோனா தடுப்­பூசி போடு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­கள் தீவி­ர­ம­டைந்து வரு­கின்­றன. இந்­தி­யா­வி­லும் மத்­திய, மாநில அர­சு­கள் இத்­த­கைய நட­வ­டிக்­கை­க­ளைத் தொடங்கி உள்­ளன.

இந்­நி­லை­யில் முன்­னு­ரிமை அடிப்­ப­டை­யில் முன்­கூட்­டியே பதிவு செய்­த­வர்­க­ளுக்­கு­தான் தடுப்­பூசி போட வேண்­டும் என்­றும் தடுப்­பூசி போடும் சம­யத்­தில் பதிவு செய்­ப­வர்­க­ளுக்கு உட­ன­டி­யாக தடுப்­பூசி போடு­வ­தற்கு அனு­மதி இல்லை என்­றும் மத்­திய அரசு தெரி­வித்­துள்­ளது.

கூடு­மா­ன­வரை ஒரு மாவட்­டத்­துக்கு ஒரே உற்­பத்­தி­யா­ள­ரின் தடுப்­பூ­சி­யைத்­தான் வழங்க வேண்­டும் என்­றும் வெவ்­வேறு நிறு­வ­னங்­க­ளின் தடுப்­பூ­சி­களை வழங்­கு­வது தவிர்க்­கப்­பட வேண்­டும் என்­றும் மாநில அர­சு­க­ளுக்கு அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளது.

"ஒவ்­வொரு தடுப்­பூசி முகா­மி­லும் ஓர் அமர்­வுக்கு அதி­க­பட்­சம் 100 பேருக்கு மட்­டுமே தடுப்­பூசி போட வேண்­டும்.

"தடுப்­பூசி போட்­ட­வு­டன் அதைப் போட்­டுக் கொண்­ட­வ­ருக்கு அடுத்த 30 நிமி­டங்­க­ளுக்­குள் ஏதே­னும் பக்க விளை­வு­கள் ஏற்­ப­டு­கின்­ற­னவா என்­ப­தைக் கண்­கா­ணிக்க வேண்­டும்," என மத்­திய அரசு தெரி­வித்­துள்­ளது.

தடுப்­பூசி எடுத்­துச் செல்­லும் கேரி­யர், குப்­பி­கள் மற்­றும் ஐஸ்­கட்­டி­கள் ஆகி­யவை நேர­டி­யாக சூரிய ஒளி­யில் படு­வது தடுக்­கப்­பட வேண்­டும் என்­றும் தடுப்­பூசி மையத்­துக்கு பய­னாளி வந்து சேரும் வரை தடுப்­பூசி மற்­றும் நீர்­மங்­களை வெளியே எடுக்­கக்­கூ­டாது என்­றும் மத்­திய அர­சின் வழி­காட்டி நெறி­மு­றை­கள் தெரி­விக்­கின்­றன.

50 வய­துக்கு மேற்­பட்ட பய­னா­ளர்­களை அடை­யா­ளம் காண அண்­மைய நாடா­ளு­மன்­றம் மற்­றும் சட்­டப்­பே­ர­வைத் தேர்­த­லில் பயன்­ப­டுத்­தப்­பட்ட வாக்­கா­ளர் பட்­டி­ய­லைப் பயன்­ப­டுத்­த­லாம் என்­றும் மத்­திய அரசு வழிகாட்டி நெறிமுறை அறிக்கையில் தெரி­வித்­துள்­ளது.