யோகாசனத்தை ஒரு விளையாட்டுப் போட்டியாக இந்திய அரசு அங்கீகரித்துள்ளது.
இத்தகவலை மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜு டெல்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்த அங்கீகாரத்தின் மூலம் யோகாசனம் மேலும் மேம்பட்டு உலகம் முழுவதும் சென்றடையும் என நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.
விரிவான ஆலோசனைகளுக்குப் பிறகு மத்திய அரசு இம்முடிவை எடுத்திருப்பதாக கிரண் ரிஜ்ஜு மேலும் தெரிவித்தார்.