தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நிர்வாண புகைப்படத்தை வெளியிடுவதாகக் கூறி ஆடவரிடம் 1.6 மில்லியன் பணம் பறிப்பு

1 mins read

பெங்­க­ளூரு: நிர்­வா­ணப் படத்தை சமூக வலைத்­த­ளங்­களில் வெளி­யி­டப்போவ­தாக மிரட்டி பெங்­க­ளூரு பொறி­யி­ய­லா­ள­ரி­டம் 1.4 மில்­லி­யன் ரூபாய் பணம் பறித்த இரு பெண்­கள் மீது போலி­சில் புகார் அளிக்­கப்­பட்­டுள்­ளது.

பெங்­க­ளூ­ரு­வைச் சேர்ந்த 25 வயது ஆட­வர் இணைய செயலி மூலம் ஸ்வேதா என்­ப­வ­ருக்கு அறி­மு­க­மா­னார். இதை­ய­டுத்து அவ­ரு­டன் அச்­செ­யலி மூலம் தின­மும் பேசி­வந்த நிலை­யில் நிகிதா என்ற மற்­றொரு பெண்ணை அறி­மு­கம் செய்து வைத்­துள்­ளார் ஸ்வேதா.

பின்­னர் அந்த ஆட­வர் நிகி­தா­வி­ட­மும் தொடர்­பில் இருந்து வந்­துள்­ள­தா­கத் தெரி­கிறது.

இந்­நி­லை­யில் சில தினங்­க­ளுக்கு முன்பு குறிப்­பிட்ட கைபேசி எண்­ணைக் கொடுத்து அதற்கு 2 ஆயி­ரம் ரூபாய் பணம் அனுப்பி வைத்­தால் தாம் நிர்­வாண கோலத்­தில் பேசு­வ­தாக கூறி­யுள்­ளார் நிகிதா.

அவ்­வாறே பணம் செலுத்­திய பொறி­யி­ய­லா­ள­ரி­டம் வாட்ஸ் அஃப் காணொளி மூலம் மீண்­டும் தொடர்புகொண்டு பேசிய நிகிதா, ஆடை­க­ளைக் களைந்து நிர்­வா­ண­மாக காட்சி அளிக்­கும்­படி அந்த ஆட­வ­ரைத் தூண்டிவிட்­டுள்­ளார். அந்த ஆட­வ­ரும் அவ்­வாறே செய்ய அவ­ரது நிர்­வாண கோலத்­தைத் தனது கைபே­சி­யில் பதிவு செய்­துள்­ளார் நிகிதா.

இதை­ய­டுத்து அவ­ரும் ஸ்வே­தா­வும் சேர்ந்து அந்த ஆட­வ­ரின் நிர்­வாண படத்தை சமூக வலைத்­தளத்­தில் வெளி­யி­டா­மல் இருக்க வேண்­டு­மா­னால் தங்­க­ளுக்­குப் பணம் தர­வேண்­டும் என்று அவ்­வப்­போது மிரட்டி ரூ.1.6 மில்­லி­யன் ரூபாய் பணத்­தைப் பறித்­துள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.