காரைக்கால்: புதுவை கிரிக்கெட் அணியில் தமிழர்கள் புறக்கணிக்கப்படுவதாக தமிழ்த்தேசிய பேரியக்கம் புகார் எழுப்பியுள்ளது.
இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கை ஒன்றில், பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமே புதுவை அணியில் இடம்பெற்றிருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் புதுவை அணியில் தற்போது இடம்பெற்றுள்ள வீரர்களின் பெயர்களைப் பட்டியலிட்டுள்ள அந்த இயக்கம் புதுவை மக்கள்தொகையில் 94 விழுக்காட்டினர் தமிழர்கள் என சுட்டிக் காட்டியுள்ளது.
"புதுவை அணியில் முழுக்க முழுக்க இந்திக்காரர்கள் உள்ளிட்ட வெளிமாநிலத்தவர்களே தேர்வு செய்யப்படுகின்றனர். புதுவை கிரிக்கெட் சங்கம் என்று குறிப்பிடப்படும் தனியார் சங்கத்தின் மூலம் தொடர்ந்து இம்முறைகேடு நடந்து வருகிறது.
இந்த அநீதியைக் கண்டித்து டிசம்பர் 26ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட இருக்கிறது," என்று தமிழ்த் தேசியப் பேரியக்கம் வெளி யிட்ட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

