தீவிரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து பிரிவு 370 மற்றும் 35A பிரிவை நீக்கி கடந்த 2019 ஆகஸ்ட் 5 ஆம் தேதி உத்தரவிட்டது இந்திய அரசு.
அதனையடுத்து இந்தியர்கள் காஷ்மீரில் நிலம் வாங்கிக்கொள்ளலாம் என்ற நிலை ஏற்பட்டது.
இதற்கிடையே, கடந்த வியாழக்கிழமை காஷ்மீரின் சாராய் பாலா மார்க்கெட் பகுதிக்குள் நுழைந்த சில தீவிரவாதிகள் அங்குள்ள நகைக்கடைக்குச் சென்று அதன் உரிமையாளர் சத்பால் நிசால் என்பவரை சரமாரியாகச் சுட்டுக் கொலை செய்துவிட்டுத் தப்பினர்.
சம்பவத்தின் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், பஞ்சாப் மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்ட சத்பால் சுமார் 50 ஆண்டுகளாக காஷ்மீரில் வசித்து வருகிறார்.
கடந்த ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத் திருத்ததை அடுத்து, அங்கு நிலம் வாங்க விரும்பினார் சத்பால். அதற்காக காஷ்மீரின் நிரந்தர குடியேற்றச் சான்றிதழ் ஒன்றுக்கு விண்ணப்பித்திருந்தார்.
அதற்கான சான்றிதழ் சில நாட்களுக்கு முன்புதான் கிடைத்ததாம். அதனைத் தொடர்ந்துதான் தீவிரவாதிகள் அவரைச் சுட்டுக் கொன்றதாகக் கூறப்படுகிறது.
இவரின் கொலைக்கு காஷ்மீரைச் சேர்ந்த ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரான்ட்’ எனும் அமைப்பு பொறுப்பேற்று அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருக்கிறது.
காஷ்மீரில் குடியேற்றச் சான்றிதழ் பெற்றிருக்கும் அனைத்து வெளிமாநிலத்தவர்களும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. காஷ்மீரில் வாழும் மற்ற மாநில மக்கள் மத்தியில் இது புதிய அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.