'கொரோனா தடுப்பூசிகள் 110% பாதுகாப்பானவை'

'கொரோனா தடுப்பூசிகள் 110% பாதுகாப்பானவை'

2 mins read
8358099a-4087-4892-ae0c-d625285e416f
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஒத்திகை சனிக்கிழமை நடைபெற்றது. டெல்லியில் உள்ள இந்த தடுப்பூசி மையத்தில் ஒத்திகைக்காக தயார் நிலையில் காத்திருக்கும் சுகாதாரப் பணியாளர்கள்.படம்: ஈபிஏ -

மருந்து தரக் கட்டுப்பாட்டு ஆணையர்: இரண்டு தடுப்பூசிகளுக்கு அவசரகால அனுமதி

புது­டெல்லி: இந்­தி­யா­வில் பொது­மக்­க­ளுக்­குச் செலுத்­தப்­படும் தடுப்­பூ­சி­கள் 110 விழுக்­காடு அள­வுக்­குப் பாது­காப்­பா­னவை என இந்­திய மருந்து தரக் கட்­டுப்­பாட்டு ஆணை­யம் தெரி­வித்­துள்­ளது.

கொரோனா தடுப்­பூ­சி­க­ளுக்­காக பெரும்­பா­லான நாடு­கள் காத்­தி­ருக்­கும் நிலை­யில் இந்­தி­யா­வில் கொவி­ஷீல்டு, கோவாக்­சின் ஆகிய இரு தடுப்­பூ­சி­க­ளுக்கு அனு­மதி அளிக்­கப்­பட்­டுள்­ளது.

இவ்­விரு தடுப்­பூ­சி­க­ளுக்­கும் அவ­ச­ர­கா­லப் பயன்­பாட்­டின் அடிப்­ப­டை­யில் ஒப்­பு­தல் வழங்­கப்­பட்­டுள்­ளது.

இதை­ய­டுத்து செய்­தி­யாளர்­க­ளி­டம் பேசிய மருந்­துத் தரக்­கட்­டுப்­பாட்டு ஆணை­யர் விஜி சோமானி, பாது­காப்பு அம்­சங்­களில் சிறி­த­ளவு குறை­பாடு இருந்­தா­லும் தடுப்­பூ­சி­கள் பயன்­பாட்­டிற்கு ஒப்­பு­தல் அளிக்­கப்­பட மாட்­டாது என்­றார்.

"இந்­தி­யா­வில் பயன்­ப­டுத்­தப்­பட உள்ள தடுப்­பூ­சி­கள் 110 விழுக்­காடு பாது­காப்­பா­னவை. தடுப்­பூசி போட்­டுக் கொண்­ட­வர்­க­ளுக்கு லேசான காய்ச்­சல், உடல் வலி, ஒவ்­வாமை போன்ற பின்­வி­ளை­வு­கள் இருக்­க­லாம்.

"ஆனால், எந்­த­வொரு தடுப்­பூசி­யைப் போட்­டுக்கொண்­டா­லும் இத்­த­கைய அறி­கு­றி­கள், பக்க விளை­வு­கள் தென்­ப­டு­வது வழக்­கம்­தான்," என்­றார் விஜி சோமானி.

கொவி­ஷீல்டு, கோவாக்­சின் ஆகிய இரு தடுப்­பூ­சி­க­ளின் அவ­ச­ர­கா­லப் பயன்­பாட்­டுக்­குத் தேவை­யான முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­க­ளோடு அனு­மதி அளிக்­கப்­பட்­டுள்­ள­தா­கக் குறிப்­பிட்ட அவர், இது­வரை நடத்­தப்­பட்ட பரி­சோ­த­னை­க­ளின் மூலம் இரு தடுப்­பூ­சி­களும் பாது­காப்­பா­னவை எனத் தெரி­ய­வந்­துள்­ளது என்­றார்.

இதற்­கி­டையே கொரோனா தடுப்­பூ­சி­க­ளுக்கு விஞ்­ஞா­னி­கள் ஒப்­பு­தல் அளித்­தி­ருப்­பது பெரிய திருப்­பு­முனை என்று பிர­த­மர் மோடி தெரி­வித்­துள்­ளார்.

ஒப்­பு­தல் அளிக்­கப்­பட்­டுள்ள தடுப்­பூ­சி­கள் இந்­தி­யா­வில் தயாரிக்­கப்­பட்­டவை என்­பது ஒவ்வோர் இந்­தி­ய­ருக்­கும் பெருமை சேர்க்­கிறது என்று அவர் கூறி­யுள்­ளார்.

கொரோனா கிரு­மித்­தொற்று இல்­லாத நாடாக இந்­தியா உரு­வாக உள்­ளது என்­றும் தொற்றுப்­ப­ர­வல் தடுப்பு நட­வ­டிக்கை பணி­களில் ஈடு­பட்ட மருத்­து­வர்­கள், காவல்­து­றை­யி­னர், தூய்­மைப் பணி­யா­ளர்­கள் மற்­றும் கொரோனா முன்­க­ளப் பணி­யா­ளர்­கள் உள்­ளிட்ட அனை­வ­ருக்­கும் நன்றி தெரி­விப்­ப­தா­க­வும் பிர­த­மர் மோடி மேலும் தெரி­வித்­துள்­ளார்.