தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மும்பை தாக்குதல் பயங்கரவாதி பாகிஸ்தானில் கைது

1 mins read

புது­டெல்லி: மும்­பைத் தாக்­கு­தல் தொடர்­பில் நீண்ட கால­மா­கத் தேடப்­பட்டு வந்த பயங்­க­ர­வாதி ஜகி­யூர் ரகு­மான் லக்வி பாகிஸ்­தா­னில் கைது செய்­யப்­பட்­டுள்­ளான்.

இவன்­தான் மும்பை தாக்­கு­த­லுக்கு மூளை­யா­கச் செயல்­பட்ட வன் எனக் கரு­தப்­ப­டு­கிறது.

லஷ்­கர் இ தொய்பா பயங்­க­ர­வாத அமைப்­பைச் சேர்ந்த ஜகி­யூர் ரகு­மானை பாகிஸ்­தான் பயங்­க­ர­வாத தடுப்­புப் பிரிவு போலி­சார் தற்­போது கைது செய்­துள்­ள­னர்.

கடந்த 2008ஆம் ஆண்டு மும்­பை­யின் பல்­வேறு பகு­தி­களில் பயங்­க­ர­வா­தி­கள் நடத்­திய தாக்­கு­த­லில் 166 பேர் உயி­ரி­ழந்­த­னர். இந்­தச் சதிச்­செ­ய­லுக்கு மூளை­யாக இருந்து செயல்­பட்­டது ஜகி­யூர் ரகு­மான் லக்­வி­தான் என்­பது விசா­ர­ணை­யில் தெரி­ய­வந்­தது.

விசா­ர­ணைக் கைதி­யாக பாகிஸ்­தா­னில் ஆறு ஆண்­டு­கள் சிறை­யில் இருந்த ஜகி­யூர், 2015இல் விடு­தலை செய்­யப்­பட்­டான். அவனை பயங்­க­ர­வாதி என ஐநா சபை­யும் அறி­வித்­தது.

இந்­நி­லை­யில் மருந்து நிறு­வ­னத்­தின் பெய­ரில் பயங்­க­ர­வாத செயல்­க­ளுக்கு நிதி திரட்­டிய குற்­றச்­சாட் டின் கீழ் ஜகி­யூர் மீண்­டும் கைதாகி உள்­ளான்.