அவதூறு பேச்சுக்கு எதிராக விவசாயிகள் எச்சரிக்கை

அவதூறு பேச்சுக்கு எதிராக விவசாயிகள் எச்சரிக்கை

2 mins read

புது­டெல்லி: விவ­சா­யி­க­ளின் போராட்­டத்­தைக் கொச்­சைப்­படுத்தும் வித­மாக சிலர் பேசு­வதை ஏற்க இய­லாது என விவ­சா­யச் சங்­கங்­கள் தெரி­வித்­துள்­ளன.

அவ்­வாறு பேசி­ய­வர்­கள் நிபந்­த­னை­யற்ற மன்­னிப்பு கோர­வேண்­டும் என்­றும் தாங்­கள் பேசிய தகாத வார்த்­தை­க­ளைத் திரும்­பப் பெற­வேண்­டும் என்­றும் அச்­சங்­கங்­கள் வலி­யு­றுத்தி உள்­ளன.

டெல்­லி­யில் ஒரு மாதத்­துக்­கும் மேலாக நடந்து வரும் விவ­சா­யி­க­ளின் போராட்­டம் குறித்து மத்­திய அமைச்­சர் கிரி­ராஜ் சிங், குஜராத் துணை முதல்­வர் நிதின் படேல், பாஜக தலை­வர் ராம் மாதவ் ஆகி­யோர் அவ­தூ­றான கருத்­து­க­ளைத் தெரி­வித்­த­தாக புகார் எழுந்­துள்­ளது.

இத­னால் விவ­சா­யி­கள் தரப்பு கடும் அதி­ருப்தியும் கோபமும் அடைந்­துள்­ளது. அம்மூவருக்கும் விவசாயிகள் தரப்பில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

"ஒட்­டு­மொத்த தேசத்­துக்­கும் தங்­கள் ரத்­தத்தை வியர்­வை­யாக மாற்றி விவ­சா­யி­கள் உணவு வழங்கி வரு­கி­றார்­கள்.

"நாட்­டின் முது­கெ­லும்­பா­க­வும் பொரு­ளா­தா­ரத்­தின் முக்­கி­யத் தூணா­க­வும் வேளாண் துறை­யும் விவ­சா­யி­களும் உள்ள நிலை­யில் அவ­தூறு பேச்­சு­களை ஏற்க இய­லாது. சம்பந்தப்பட்டவர்கள் இதற்காகாக எங்களிடம் உடனடியாக மன்னிப்பு கோர வேண்டும்," என விவ­சாய சங்­கங்­கள் தெரி­வித்­துள்­ளன.

விவ­சா­யி­கள் என்­னும் பெய­ரில் சமூக விரோத சக்­தி­கள், தீவி­ர­வாதி­கள், கம்­யூ­னிஸ்ட் மற்­றும் சீன ஆத­ர­வா­ளர்­கள் போராட்­டக் களத்­தில் இணைந்­தி­ருப்­ப­தாக குஜ­ராத் துணை முதல்­வர் நிதின் படேல் அண்மையில் கருத்து தெரி­வித்­தி­ருந்­தார்.

இதே­போல் விவ­சா­யி­க­ளின் போராட்­டத்­தில் வெளி­நாட்டு சக்தி­கள் புகுந்துவிட்­ட­தாக மத்­திய அமைச்­சர் கிரி­ராஜ் சிங் கூறி­ இருந்­தார்.

இத்­த­கைய சூழ்­நி­லை­யில் தங்­க­ளு­டைய கோரிக்­கை­களை மத்­திய அரசு ஏற்­கும் என இப்­போ­தும் நம்­பு­வ­தாக விவ­சாய சங்­கங்­கள் தெரி­வித்­துள்­ளன.

இன்று நடை­பெ­ற­வுள்ள அடுத்த சுற்று பேச்­சு­வார்த்­தை­யின்­போது மத்­திய அரசு தங்­க­ளது கோரிக்­கை­களை ஏற்­கும் என நம்­பு­வ­தாக விவ­சா­யச் சங்­கங்­க­ளின் பிர­மு­கர்­கள் கூறி­யுள்­ள­னர்.